சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழ் சினிமாவைச்சேர்ந்த யாரும் படப்பிடிப்பு நடத்த செல்வதில்லை. ஒரு இந்தி படப்பிடிப்புக்காக அசின் சென்றபோதுகூட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, நான் ஒன்றும் தமிழ் நடிகை இல்லை என்று சொல்லிவிட்டு சென்றார்.
விளைவு, இனிமேல் எந்த தமிழ்ப் படத்திலும் அசினை நடிக்க விடமாட்டோம் என்று ஒருசாரர் அப்போது குரல் கொடுத்தனர். அதன்காரணமாகவே அசினை புக் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் அஞ்சினர். இந்த நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி கடற்கரை பகுதிக்கு படப்பிடிப்புக்கு சென்ற சூர்யாவின் மாஸ் படக்குழு அங்கிருந்தபடியே இலங்கைக்கு சென்று அங்குள்ள கடற்கரையோரமாக படப்பிடிப்பு நடத்தி விட்டு திரும்பியதாக தற்போது ஒரு சர்ச்சை செய்தி வெளியாகியிரூக்கிறது.
ஆனால், இதுகுறித்து மாஸ் பட டைரக்டர் வெங்கட்பிரபுவை நோக்கி பாய்ந்த கேள்விகளுக்கு, தூத்துக்குடியில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். இலங்கைக்கு செல்லவே இல்லை. யாரோ திட்டமிட்டு இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் மாஸ் வெளியாகும்போது அதை வைத்தே போர்க்கொடி பிடிப்பார்கள் என்று தெரிகிறது.