இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
அனுபவம்தான் வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது என்று சொல்வார்கள். இதை யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ... நடிகர் விஷால் கண்டிப்பாக ஒப்புக்கொள்வார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த ஆம்பள படத்தின் மீது விஷாலுக்கு ஏக நம்பிக்கை. குறிப்பாக ஆம்பள படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஷாலின் நம்பிக்கை பல மடங்கள் அதிகமானது. அதன்காரணமாகவே, ஐ மற்றும் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாவதாக சொல்லப்பட்டநிலையிலும் தன்னுடைய ஆம்பள படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று தைரியமாக களத்தில் இறங்கினார்.
தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு ஆம்பள படம் ஓடவில்லை. அதனால் விஷாலுக்கு சில கோடிகள் நஷ்டம். அதைப் பற்றிக்கூட அவருக்கு கவலை இல்லை. ஆனால் இன்னொரு விஷயம் அவருக்கு கடும் மன உளைச்சலைக் கொடுத்துவிட்டது. ஆம்பள படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட இருந்தார். தெலுங்கு டப்பிங்கைப் பார்த்த விநியோகஸ்தர்கள் படத்தைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்துவிட்டனர். காரணம் ஆம்பள படத்தின் கதையும், அப்படத்தில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளும்... பல தெலுங்குப் படங்களில் இருந்து சுடப்பட்டு ஆம்பள படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த விஷயம் தெரிந்ததும் சுந்தர்.சி மீது கடுப்பாகிவிட்டாராம். கோடிகளில் சம்பளம் கொடுத்தும் கதையைக் கூட ஒரிஜினலாக பண்ணாமல் தெலுங்குப்படத்திலிருந்து சுட்டு ஒப்பேற்றிவிட்டாரே என்று வருத்தப்பட்டிருக்கிறார். இந்த மோசமான அனுபவம் காரணமாகவே தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் கதையை மட்டுமல்ல, சீன் பை சீன் மொத்தப் படத்தின் காட்சிகளையும் சொல்லச் சொல்லிவிட்டார் விஷால்.