தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதற்பிறகு பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்தார். ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும், ''தனி ஒருவன்'', ''மானே தேனே பேயே'', ''தப்பு தாளங்கள்'', ''வெயிலோடு விளையாடு'', ''அமளி துமளி'', ''ரெண்டாவது படம்'', ''காதல் பாதை'', ''இரவும் பகலும்'', ''வெற்றி'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சஞ்சான சிங்கிற்கு இன்று பிறந்தநாள். கோவாவில் தனது குடும்பத்திடருன் பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளையொட்டி சஞ்சனா சிங் கூறியதாவது: மும்பையில் மாடலாக என் வாழ்க்கையை துவக்கினேன். ரேணிகுண்டா படத்திற்கு ஹீரோயின் செலக்ஷன் நடந்தபோது நானும் சென்றேன். என்னை பார்த்த இயக்குனர் பன்னீர் செல்வம், என் படத்தின் நாயகி 16 வயது பெண் நீங்கள் 20 வயதில் இருக்கிறீர்கள், ஹீரோவும் சின்ன பையன் அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு படத்தில் இன்னோர் கேரக்டர் இருக்கிறது.
ஹீரோயினின் அக்கா பாலியல் தொழிலாளி கேரக்டர் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடிக்கலாம் என்றார். எப்படி நடித்தாலும் நடிப்புதானே என்ற நடிக்க ஒப்புக் கொண்டேன்.
அந்த கேரக்டர் எனக்கு பெயரை வாங்கித் தந்தாலும் ஹீரோயின் ஆவதற்கு தடையாக அமைந்து விட்டது. அதன்பிறகு அதே மாதிரியான கேரக்டர்கள்தான் வந்தது. சரி நடித்துக் கொண்டே போராடுவோம் என்று நடிக்க ஆரம்பித்தேன். ரகளபுரம் மாதிரியான சில படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்தேன். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பு வரும். அடுத்த பிறந்த நாளுக்குள் ஹீரோயினாக ஜெயித்து காட்டுவேன். என்கிறார் சஞ்சனா சிங்.