டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினி நடித்த சந்திரமுகி பட பாணியில் சுந்தர்.சி இயக்கிய படம் அரண்மனை. வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம் என பலர் நடித்த இந்த படத்தை ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரீமேக் போல் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. அந்த படத்தை தயாரித்தவர்கள்கூட சுந்தர்.சி தரப்பில் ரீமேக் உரிமைக்கான தொகையை கேட்டு பிரச்சினை செய்ததாக அப்படம் வெளியான நேரத்தில் பரபரப்பு நிலவியது.
ஆனபோதும், ஆயிரம் ஜென்மங்கள் மாதிரி இதுவும் ஒரு கற்பனை. இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பின்னர் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதையடுத்து, ஆம்பள என்ற படத்தை விஷாலை வைத்து இயக்கினார். கலகலப்பான படம் என்றபோதும் அப்படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதனால் மீண்டும் காமெடி படத்தில் இறங்காமல், ஒரு வித்தியாசமான ஹாரர் படத்தை எடுக்கலாம் என்று நினைக்கிறாராம் சுந்தர்.சி.,
அதனால், சமீபத்தில் தான் இயக்கியதில் பெரிய வசூலை கொடுத்த அரண்மனை படத்தை தழுவியே அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் அவர். அதேசமயம் பழைய சாயல் எதுவும் இலலாமல், இன்றைய டெக்னிக்கில் புதுமையான முறையில் அந்த அமானுஷ்ய படத்தை இயக்கவிருக்கும் சுந்தர்.சி, அந்த படத்துக்காக ஏற்கனவே ஹன்சிகா, சந்தானத்திடம் பேசி விட்ட நிலையில், மேலும் சில நடிகர் நடிகைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.