'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கருத்துக்களைச் சொல்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பது இந்தக் காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும். ஏறக்குறைய அப்படி கருத்துக்களையும், ஏதாவது ஒரு செய்திகளையும் போடுவது பலருக்குப் பழக்கமாகிவிட்டது. அவற்றைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று பலர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலரோ, சம்பந்தமேயில்லாத விஷயத்தில் கூட தலையை நுழைத்து எதையாவது வாங்கிக் கட்டிக் கொள்ளும் வழக்கமும் உள்ளது.
நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் நடிகை சமந்தா டிவிட்டர் கணக்கை துவக்கிய நாளிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் பல கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வந்தவர். அரசியல், சினிமா என தனது கருத்துக்களை ஆழகமாகப் பதித்தவர். சமயங்களில் அவருடைய கருத்துக்கள் சில சர்ச்சையை ஏற்படுத்தியதும் உண்டு. அவர் செய்யும் சில சமூக நல விஷயங்களைக் கூட டிவிட்டரில் சொல்லி அதற்கும் பலரது ஆதரவுகளையும் பெற்று வந்தார்.
அப்படிப்பட்ட சமந்தாவை யாரோ டிவிட்டரில் நோகடித்து விட்டார்களா என்று தெரியவில்லை. சில காலம் டிவிட்டரை விட்டு விலகி இருக்கப் போகிறேன் என தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் சமந்தா. “சில காலம் டிவிட்டரை விட்டு விலகுகிறேன், கடவுள் ஆசீர்வதிக்கட்டும், நல்லா இருங்க'' என்ற தகவலுடன் டிவிட்டரில் கடந்த நான்கு நாட்களாக சொன்னபடியே டிவிட்டரை விட்டு விலகியிருக்கிறார் சமந்தா. அழகான பெண்ணின் மனதை நோகடித்தவர் யாரோ தெரியவில்லையே....