மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
3 படத்தில் அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பின்னணியும் பாடி அந்த பாடலில் தானே நடித்திருந்தார் தனுஷ். அதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதனால் அதையடுத்து, தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் பாடல் எழுதி பின்னணி பாடுவதை தொடர்ந்து வருகிறார் தனுஷ்.
அந்த வகையில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் மொத்த பாடல்களையும் எழுதிய தனுஷ், அப்படத்தில் பாடிய அம்மா அம்மா, வாட் ய கருவாட் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டானது. அதையடுத்து, இப்போது அனேகன் படத்திலும் மரண கானா விஜியுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ள டங்கா மாரி ஊதாரி பாடலும் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
அதனால் இப்போது தனுஷ் பாடிய பாடல்களின் ஆடியோ ரைட்சுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறதாம். அதன்காரணமாக, மாரி படத்தைத் தொடர்ந்து மீண்டும் வேல்ராஜ் இயக்கும் படத்திலும் முழுப்பாடல்களையும் தானே எழுதுகிறாராம் தனுஷ். அதனால் மாரி படத்தின் பாடல் பதிவு முடித்து விட்ட அனிருத், அடுத்து வேல்ராஜ் இயக்கும் படத்திற்கான பாடல் கம்போஸ் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார். அதனால் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ். ஓய்வு கிடைக்கும்போது, அந்த டியூன்களை ஏதாவது மரத்தடியில் அமர்ந்து கேட்டபடி பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறாராம்.