600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஷங்கரின் டைரக்சனிலேயே டெக்னிக்கலாக மிகவும் பிரமாண்டமான படம் என்றால் அது எந்திரன் ஆகத்தான் இருக்கமுடியும். ஆனால் அந்தப்படத்தின் கதையை உருவாக்கிவிட்டு அதை படமாக்கத்தான் பல ஆண்டுகள் காத்திருந்தார் ஷங்கர். காரணம் அந்த படத்தின் பட்ஜெட்.. அப்போதெல்லாம் அந்த அளவு பட்ஜெட்டிற்கு தமிழ் சினிமா தயாராகி இருக்கவில்லை.. இருந்தாலும் அந்தப்படத்தின் கதையை எழுத்தாளர் சுஜாதாவுடன் உட்கார்ந்து பட்டை தீட்டினார் ஷங்கர். கமலை வைத்து இந்தியன் படத்தை கொடுத்த ஷங்கர், பிறகு ரோபோவிலும் அதாவது எந்திரனிலும் கமலை நடிக்க வைப்பதாகத்தான் அப்போது பரபரப்பான பேச்சாக இருந்தது.
அனில் கபூரை வைத்து ஷங்கர் தனது முதல்வன் படத்தை நாயக்காக ரீமேக் செய்தார். ஆனால் அதுவும் வெறும் பேச்சளவிலேயே நின்றுவிட்டது. பின்னர் அஜித் நடிப்பதாக பேச்சு திசை மாறியது. ஆனாலும் மேற்கொண்டு காரியங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை.. அதில் சூப்பர்ஸ்டார்தான் நடிக்கவேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி என்றால் அதை யார் மாற்ற முடியும்..? அப்படித்தான் எந்திரன் உருவானது.