இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஒரு உதவி இயக்குனர், ஒரு இசையமைப்பாளர் இருவரும் சினிமாவில் ஜெயிப்பதற்காக போராடுவதை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் விரைவில் இசை. இந்த படத்தை வி.எஸ். பிரபா இயக்கியிருக்கிறார். மகேந்திரன் உதவி இயக்குனராகவும், திலீப் ரோசர் இசையமைப்பாளராகவும் நடித்துள்ளனர். அர்பணா, ஸ்ருதிராமகிருஷ்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இந்த படத்தில் முழு காமெடியனாக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து டைரக்டர் வி.எஸ்.பிரபா கூறுகையில், சாதாரணமாக சினிமாவில் சாதிப்பதற்கு முன்பு சாப்பாட்டுக்கே அவர்கள் கஷ்டப்படுவது போன்று சொல்லாமல், இலக்கை அடைய அவர் சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். கதைப்படி, அவர்களுக்கு சான்ஸ் கிடைக்கிறது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில்போது சமூகத்தில் நடக்கிற ஒரு விசயத்தை அவர்கள் கிராஸ் பண்ணுகிறார்கள். அதையடுத்து படப்பிடிப்பு தடைபடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த படம்.
மேலும், இந்த படத்துக்கு எம்.எஸ்.ராம் என்ற புதியவர் இசையமைத்துள்ளார். கதையின் சூழலுக்காக அவர் கொடுத்துள்ள 7 பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக வந்திருக்கிறது. அதில் சினிமாக்காரர்களைப் பற்றி அவர் இசையமைத்திருக்கும் ஒரு பாடல் சினிமா உலகின் தேசிய கீதம் போன்று உள்ளது. இதுபோக, தமிழ் சினிமாவில் இருந்த, இருக்கிற, இருக்கப்போகிற உதவி இயக்குனர்களுக்காக ஒரு கவிதை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த கவிதையை உதவி இயக்குனர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
அதோடு, சிலர் சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரர்களை கிண்டல் செய்து படமெடுக்கிறார்கள். ஆனால் நான் சினிமாவில் ஜெயிக்க போராடும் ஒவ்வொருவரின் வலியினை உணர்வுப்பூர்வமாக சொல்ல வருகிறேன். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் அனைவருக்குமே பிடிக்கும். அதேசமயம், இந்த படத்தை முழுக்க முழுக்க சீரியசாக சொல்லாமல், காமெடி கலந்தே கதை பண்ணியிருக்கிறேன். அதோடு இரண்டு காதலும் இந்த படத்தில் உள்ளது.
ஒரு பெண் தனது காதலன் சினிமாவில் ஜெயிக்க உறுதுணையாக இருப்பாள். இன்னொரு பெண்ணோ, உன்னை பிடித்திருக்கிறது. ஆனால் உனது போராட்டம் பிடிக்கவில்லை என்பாள். அவளது காதலனோ, உன்னை பார்த்து 6 மாசம்தான் ஆச்சு. ஆனால் நான் சினிமாவை 15 வருடசமா காதலிக்கிறேன். என்னோட கனவு லட்சியம் எல்லாமே சினிமாதான். உனக்காக அதை நான் விட முடியாது என்பான்.