பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில்,விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். ஜூனியர், சீனியர் என இரண்டு விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் சமீபத்தில் விஜய் டிவியில் ஔிப்பரப்பட்டு வந்தது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 நிகழ்ச்சி. பல்வேறு கட்ட போட்டிகளை கடந்து இறுதிபோட்டிக்கு பரத், ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்ரீஷா ஆகிய 6 குழந்தைகள் தேர்வாகினர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று சென்னை, ஓ.எம்.ஆர்., ரோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியல் நடந்தது. நேரடி நிகழ்ச்சியாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூடவே சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சிவகார்த்திகேயன், அனிரூத், கே.வி.ஆனந்த், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட திரைபிரபலங்களுடன் மனோ, சித்ரா, சுபா, சுதா ரகுநாதன் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதிபோட்டிக்கு தேர்வான 6 குழந்தைகளும் தங்களது திறமைகளை பாட்டு மூலம் வௌிப்படுத்தினர். மக்கள் அளித்த ஓட்டு மூலம் போட்டிக்கான வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டது. சுமார் 1 கோடிக்கும் அதிமான மக்கள் ஓட்டளித்ததாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் கூறினர்.
முதல் பரிசு : நிகழ்ச்சியின் முடிவில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்பூர்த்தி என்ற குழந்தை, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசு : ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4ன் முதல் ரன்னராக, ஜெசிகா தேர்வானார். அவருக்கு 1கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
மூன்றாவது பரிசு : ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4-ன் இரண்டாவது ரன்னராக, ஹரிப்ரியா தேர்வானார். அவருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.
மற்ற போட்டியாளர்களான பரத், அனுஷ்யா மற்றும் ஸ்ரீஷா ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
ஜெசிகாவின் உயர்ந்த உள்ளம் : ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4-ல் இரண்டாவதாக வந்த ஜெசிகா, கனடாவை சேர்ந்தவர். அவர் இந்த போட்டியின் மூலம் பெற்ற 1கிலோ தங்க பரிசை, இந்தியாவில் உள்ள அனாதை குழந்தைகள் இல்லம் ஒன்றுக்கு பாதியையும், மீதியை இலங்கையில், தமிழர்கள் வாழும் அனாதை இல்லத்திற்கு வழங்குவதாகவும் ஜெசிகாவின் தந்தை கூறினார். இது ஜெசிகாவே எடுத்த முடிவு என்று அவரது தந்தை கூறினார். இந்த சின்ன வயதில் அவர் அளித்த இந்த நன்கொடை அவ்வளது சாதரணமான விஷயமல்ல.