Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூப்பர் சிங்கர் ஜூனியர்-4: ஸ்பூர்த்தி வின்னர்! - 1கிலோ தங்கத்தை தானம் தந்த ஜெசிகா

21 பிப், 2015 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Spoorthi-wins-Airtel-Super-Singer-junior-4-title-winner

தமிழ் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில்,விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். ஜூனியர், சீனியர் என இரண்டு விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் சமீபத்தில் விஜய் டிவியில் ஔிப்பரப்பட்டு வந்தது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 நிகழ்ச்சி. பல்வேறு கட்ட போட்டிகளை கடந்து இறுதிபோட்டிக்கு பரத், ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்ரீஷா ஆகிய 6 குழந்தைகள் தேர்வாகினர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று சென்னை, ஓ.எம்.ஆர்., ரோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியல் நடந்தது. நேரடி நிகழ்ச்சியாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூடவே சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சிவகார்த்திகேயன், அனிரூத், கே.வி.ஆனந்த், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட திரைபிரபலங்களுடன் மனோ, சித்ரா, சுபா, சுதா ரகுநாதன் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இறுதிபோட்டிக்கு தேர்வான 6 குழந்தைகளும் தங்களது திறமைகளை பாட்டு மூலம் வௌிப்படுத்தினர். மக்கள் அளித்த ஓட்டு மூலம் போட்டிக்கான வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டது. சுமார் 1 கோடிக்கும் அதிமான மக்கள் ஓட்டளித்ததாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் கூறினர்.


முதல் பரிசு : நிகழ்ச்சியின் முடிவில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்பூர்த்தி என்ற குழந்தை, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.


இரண்டாவது பரிசு : ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4ன் முதல் ரன்னராக, ஜெசிகா தேர்வானார். அவருக்கு 1கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.


மூன்றாவது பரிசு : ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4-ன் இரண்டாவது ரன்னராக, ஹரிப்ரியா தேர்வானார். அவருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.


மற்ற போட்டியாளர்களான பரத், அனுஷ்யா மற்றும் ஸ்ரீஷா ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.


ஜெசிகாவின் உயர்ந்த உள்ளம் : ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4-ல் இரண்டாவதாக வந்த ஜெசிகா, கனடாவை சேர்ந்தவர். அவர் இந்த போட்டியின் மூலம் பெற்ற 1கிலோ தங்க பரிசை, இந்தியாவில் உள்ள அனாதை குழந்தைகள் இல்லம் ஒன்றுக்கு பாதியையும், மீதியை இலங்கையில், தமிழர்கள் வாழும் அனாதை இல்லத்திற்கு வழங்குவதாகவும் ஜெசிகாவின் தந்தை கூறினார். இது ஜெசிகாவே எடுத்த முடிவு என்று அவரது தந்தை கூறினார். இந்த சின்ன வயதில் அவர் அளித்த இந்த நன்கொடை அவ்வளது சாதரணமான விஷயமல்ல.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in