தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்ற எனது கனவு நனவாகி விட்டது என்று சொல்லி பூரித்தார் ஆர்யா. அவரைத் தொடர்ந்து ஜெயம்ரவியும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகாமலேயே உள்ளது என்று தனது ஆசையை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அதை நிறைவேற்ற எந்த இயக்குனர்களும் முன்வரவில்லை. அதனால் தனது அண்ணன் ஜெயம் ராஜா தனி ஒருவன் படத்தை இயக்க தயாரானபோது, நயன்தாராதான் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று கண்டிசனாக சொல்லி அவரை புக் பண்ண வைத்தார் ஜெயம்ரவி. இப்போது ஜெயம்ரவியின் நயன்தாரா கனவும் நனவாகி விட்டது.
அவர்களைத் தொடர்ந்து விஜயசேதுபதிக்கும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு மனதளவில் இருந்தது. அதை தற்போது நானும் ரெளடிதான் படத்தின் மூலம் நிறைவேற்றி வைத்திருக்கிறார் அந்த படத்தை தயாரிக்கும் தனுஷ். அதனால் அதிக உற்சாகத்துடன் அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி.
அந்தவகையில், முதல்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்த நிலையில், அடுத்தகட்டமாக வேறு சில லொகேசன்களை தேடினர். ஆனால் எதிர்பார்த்தபடி இல்லாததால் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மீண்டும் பாண்டிச்சேரியிலேயே நடத்தப்போகிறார்களாம். அதோடு, முதல்கட்ட படப்பிடிப்பில் வில்லன் ஆனந்த ராஜின் அடியாட்களுடன் விஜயசேதுபதி மோதிக்கொள்வது போன்ற ஆக்சன் காட்சிகளையே அதிகமாக படமாக்கியவர்கள், இப்போது விஜயசேதுபதி-நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சிகளை கூடுதலாக படமாக்குகிறார்களாம்.
அதுவும் சில காட்சிகளில் கிளுகிளு காஸ்டியூம்களில் தோன்றப்போகிறாராம் நயன்தாரா. ஆக, ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமாக நடித்து அனுபவப்படாத விஜயசேதுபதி, நயன்தாராவை நெருங்கும்போது அவரது திக்குமுக்காட வைக்கும் கவர்ச்சியில் மிரளப்போவது உறுதி என்கிறார்கள் அப்படக்குழுவினர்.