ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளிடம் கடலை போடுவதில் மன்னன் என்று இதுவரை ஆர்யாதான் பெயரெடுத்து வந்தார். தனக்கு முன்ன பின்ன அறிமுகமே இல்லாத நடிகைகளாக இருந்தாலும் இவரே தேடிச்சென்று அவர்களிடம் நட்பு வளர்ப்பார். அதையடுத்து வம்பு வளர்ப்பார் என்றெல்லாம் ஆர்யாவைப்பற்றி விதவிதமான கலாட்டா செய்திகள் கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது நகுலும் அந்த பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளார். தன்னுடன் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்துள்ள பிந்துமாதவி- ஐஸ்வர்யா தத்தா என்ற இரண்டு நடிகைகளிடமும் அந்த படத்தில் நடித்தபோது அவர் போடாத கடலை இல்லையாம்.
முக்கியமாக தனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவைதான் ஒரு வழி பண்ணி விட்டாராம். தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து விட்டு அவர் ரிலாக்சாக உட்கார்ந்து கொண்டிருந்தால், அவரை அழைத்து கண்ட கண்ட விசயஙகளைப்பற்றியெல்லாம் பேசி கடலை போட்டாராம் நகுல். இதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்று அவர் கழண்டுகொள்ள நினைத்தாலும், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தெரியாத விசயங்களை கேட்டு தெரிஞ்சிக்கணும் என்று சொல்லி மணிக்கணக்கில் அவரிடம் கடலை போட்டு வந்தாராம்.