தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்-முருகதாஸ் முதன்முறையாக இணைந்த படம் ''துப்பாக்கி''. 2012-ம் ஆண்டு தீபாவளி சரவெடியாக வௌிவந்த இப்படம், சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது. விஜய்யை புதுமாதிரியாக ஒரு ஸ்டைலிஸான ரோலில் காண்பித்தார் முருகதாஸ். ரசிகர்களுக்கும் அந்த ஸ்டைல் மிகவும் பிடித்து போனது. துப்பாக்கியை வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து கத்தி படம் பண்ணினர். இப்படத்திற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் சேர்ந்தது. தற்போது விஜய், சிம்புதேவன் படத்திலும், முருகதாஸ் இந்தி படத்திலும் பிஸியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸிடம், துப்பாக்கி-2 எப்போது உருவாகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முருகதாஸ். பொதுவாக எனக்கு ஒரு படத்தின் தொடர்ச்சி பண்ணுவதில் உடன்பாடு கிடையாது. கதைகளம் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் எனக்கு புதுசாக இருக்க வேண்டும். ஏற்கனவே வௌிவந்த படத்தின் தொடர்ச்சியை எடுத்தால், முதல் படத்தை காட்டிலும் இந்தப்படம் பெரிதாக இல்லை என்று ஒருவரும் சொல்லிவிடக்கூடாது. அதனால் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பேன். ஆனாலும் துப்பாக்கி-2 படத்திற்கான கதை திடீரென தோன்றினால் நிச்சயம் பண்ணுவேன். அதுவும் விஜய்யை வைத்து பண்ணுவேன். துப்பாக்கி-2 மட்டுமல்ல, இன்னும் நிறைய படங்கள் விஜய்யை வைத்து பண்ண வேண்டும் என்ற ஆசையிருக்கிறது என்று கூறியுள்ளார்.