தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்கும் பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறது. முதலில் பேச்சுவார்த்தையில் தொடங்கியவர்கள், பின்னர் உண்ணாவிரதம் இருந்தனர். அதையடுத்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதோடு, நில்லாமல் அந்த போராட்டத்தை ஒரு அரசியல்வாதியே தொடங்கி வைப்பார் என்று சொல்லி, சினிமா பிரச்சினையை அரசியலோடு முடிச்சு போட்டு விட்டனர். விளைவு, அந்த அரசியல்வாதி திருமாவளவன் என்றொரு செய்தி பரவத் தொடங்கியது. அதையடுத்து, அதற்கு அந்த கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது. அதேபோல் ரஜினியை எங்களுக்கு நஷ்டஈடு தர விடாமல் சரத்குமாரும், விஜய்யும்தான் தடுக்கிறார்கள் என்று அவர்கள் கூறியதற்கு, தற்போது சரத்குமாரும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பலதரப்பினரும் ரஜினிக்கு ஆதரவாக கருத்து சொல்லி வரும் நிலையில், இதுவரை பொறுமையாக இருந்து வந்த ரஜினியின் ரசிகர்களும் அடுத்து அவருக்கு ஆதரவான போட்டத்தில் குதிக்கின்றனர்.