ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட்செட்டர் என்றால் அது விஜயசேதுபதிதான். அவரது வருகைக்கு முன்பு வரை ஹீரோ என்றால் இந்த மாதிரியான கதைகளில் மட்டும்தான் நடிக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றொரு டிரெண்ட் இருந்து வந்தது.
ஆனால், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், அவர் பேசிய டயலாக்கையே பேசிக்கொண்டிருப்பார். அவரைச்சுற்றியிருந்த கேரக்டர்கள்தான் வெவ்வேறு டயலாக்குகளை பேசின. அந்த படம் ஹிட் அடித்தது. அதையடுத்து, பீட்சா படத்தில் தனது முதலாளியை ஏமாற்றி மோசடி செய்யும் வேடத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.
அதைப்பார்த்துதான் அதன்பிறகு பாசிட்டிவ் கதைகளாக நடித்து வந்தவர்களும் நெகட்டிவ் கதைகளில் நடிக்கத் தொடங்கின. அந்த வகையில், விஜயசேதுபதி பாணியில் இப்போது அட்டகத்தி தினேசும் மாறியிருக்கிறார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் நான் கதாநாயகன் இல்லை, கதையின் நாயகன். அதனால் எனக்காக கதை பண்ணுவதை விட்டு விட்டு கதைக்காக என்னை நடிக்க வையுங்கள் என்று கூறி வருகிறார். அதோடு, விஜயசேதுபதி நடித்துள்ள சில படங்களை சுட்டிக்காட்டி அந்த மாதிரி வித்தியாசமான கதைகளாக ரெடி பண்ணுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு வருகிறார் தினேஷ்.