ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்த படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் நடிக்க முதலில் சசிகுமார் கதை சொன்னது கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவிடம்தான். ஆனால் கதையை கேட்ட பாக்யராஜிற்கு பிடிக்கவில்லை. ஒரே வெட்டு குத்தா இருக்கு. என் பையன் இதில் நடித்தால் சரியாக வராது என்று மறுத்து விட்டார்.
அதன்பிறகுதான் அந்த வாய்ப்பு ஜெய்க்கு சென்றது. ஆனால், அந்த படமோ சூப்பர் ஹிட்டாகி விட்டது. அதையடுத்துதான் தன் மகன் நடிக்க இருந்ததை தானே கெடுத்து விட்ட விசயத்தை மேடையில் சொன்னார் பாக்யராஜ். ஆக சுப்ரமணியபுரம் படத்தில் இருந்துதான் ஜெய்யின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆனது. எங்கேயும் எப்போதும், ராஜாராணி, வடகறி படங்களுக்கு பிறகு தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணினார். இருப்பினும் அதற்கடுத்து அவர் கமிட்டான சில படங்கள் இழுபறியில் நிற்பதோடு, சில படங்கள் தோல்வியடைந்தது.