ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழாலும், தமிழ் சினிமாவாலும் வாழ்ந்து வருபவர்கள் ஏராளம்! அவர்களில் சற்றே வித்தியாசமாக தன்னால் இயன்றவரை தமிழ் சினிமாவை வாழவைக்கும் முகமாக களம் இறங்கி இருக்கிறார். “ கவிஞர் கிச்சன்” உணவகம் நடத்தி வரும் பாடலாசிரியர் ஜெயம் கொண்டான்!
அது எப்படி?
தமிழ் சினிமாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடைக்கும் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டு தனது வருமானத்திற்காகவும், தன் மாதிரி போராடும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவும் சொந்தமாக ஒரு உணவகத்தை சென்னை கலைஞர் நகர், காமராஜர் சாலை பகுதியில் நடத்தி வரும் ஜெயம் கொண்டான்., தமிழ்திரைப்படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் திருட்டு விசிடி - டிவிடி களால் தள்ளாடி வரும் தமிழ் சினிமாவை வாழவைக்கும் விதமாக., தமிழ் திரைப்படங்களை தியேட்டரில் பார்த்து விட்டு அந்த சினிமா டிக்கெட்டுகளுடன் வரும் ரசிகர்களுக்கு தன் “கவிஞர் கிச்சன்” உணவகத்தில் அவர்கள் உண்ணும் உணவின் விலையில் 10% தள்ளுபடி செய்வதாக அறிவித்து விளம்பரமும், வியாபாரமும் செய்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்து வருகிறார்.
“வேடப்பன்”, “தங்கப்பாம்பு”, “ஒரு சந்திப்பில்”, “சோக்கு சுந்தரம்”, “திருப்புகழ்”, “இந்திரசேனா”, “கொத்தனார்” உள்ளிட்ட அரை டஜனுக்கு மேற்ப்பட்ட தமிழ் படங்களில் பாடல்கள் எழுதியிருக்கும் ஜெயம் கொண்டான், தற்போது அறிமுக இயக்குநர் வசந்த் இயக்கத்தில், பிரபல பாடகர்கள் “கானா” உலக நாதன், “கானா பாலா” இருவரும் இணைந்து நடிக்கும் நாடக மேடை படத்தில் “எகிப்து, சூடான், எத்தியோபியா, கென்யா, சோமாலியா, உகாண்டா, தான்சனியா...” என எண்ணற்ற உலக நாடுகளின் பெயர்களோடு தொடங்கி தொடரும் பாடலில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, உள்ளிட்ட ஏழு கண்டங்களையும் அக்கண்டங்களில் உள்ள புகழ் வாய்ந்த நாடுகளையும் பட்டியலிட்டு எழுதி இருக்கிறார். இப்பாடல் விரைவில் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க, ஜொலிக்க இருக்கிறதாம்!
“புதுமை விரும்பி” இயக்குநர் - நடிகர் பார்த்திபன் தொடங்கி நிறைய தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் “கவிஞர் கிச்சனி”ன் ரெகுலர் கஸ்டமர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
“செவிக்கு உணவில்லையேல் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்...” என்னும் குறளுக்கு ஏற்ப தன் “கவிஞர் கிச்சன்” உணவகத்தில் தன்னை தேடிவரும் சினிமா நண்பர்களுக்கு வயிற்றுக்கும், உணவு அளித்து விட்டு அவர்களது செவிக்கு விருந்து அளிக்கும் விதத்தில் தன் கவிதைகளையும், பாடல்களையும், தன்னை பற்றிய பத்திரிக்கை குறிப்புகளையும் கவிஞர் ஜெயம்கொண்டான் பரிமாறுவதையும், பகிர்வதையும் காண்பதே., சற்று வித்தியாசமான அனுபவம்! சென்னை கலைஞர் நகர், காமராஜர் சாலையில் உள்ள “கவிஞர் கிச்சனு”க்கு சென்று அந்த அனுபவத்தை நீங்களும் ஒருமுறை அனுபவித்து தான் பாருங்களேன்! வாருங்களேன்!!