துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
லிங்குசாமி இயக்கிய அஞ்சான்' படத்தின் தோல்வியிலிருந்து மீண்டு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுவரை வெளியான பேய்ப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகி வருகிறது மாஸ் படம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒரு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார். வெங்கட்பிரபுவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக விளங்கும் பிரேம்ஜியும் மாஸ் படத்தில் நடிக்கிறார். இவர்களுடன், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் மாஸ் படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கி உள்ளது. மாஸ் படத்தை ஈராஸ் நிறுவனம் வாங்கிய பிறகு அப்படத்தின் ரேன்ஜ் மேலும் கூடிவிட்டது. யெஸ்.. மாஸ் படத்தை 3டியில் வெளியிட உள்ளது ஈராஸ்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது ஈராஸ். 'வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் திரைப்படத்தின் உலகளவிலான வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது தமிழின் முதல் 3டியில் படம் பிடிக்கப்பட்ட படமாகும். ஜூன் அல்லது ஜூலை மாதம் இப்படம் ரிலீஸாகும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளது.