டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய மொகல் டகுபதி ராமாநாயுடு இன்று காலமானார். புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த ராமாநாயுடு, இன்று சிகிச்சைபலனின்றி காலமானார். 1964ம் ஆண்டு, என்.டி.ஆர் முன்னணி கேரக்டரில் நடித்த ராமுடு பீமுடு படத்தின் மூலம் தயாரிப்பாளராக, ராமாநாயுடு அறிமுகமானார். 14 இந்திய மொழிகளில், 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். பல படங்களில் கெஸ்ட் ரோல்களிலும், ராமாநாயுடு நடித்துள்ளார். தெலுங்குதேசம் கட்சியில் இணைந்த ராமாநாயுடு, லோக்சபா தேர்தலில், பாப்தலா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்
தமிழில் பெரும்வெற்றி பெற்ற வசந்த மாளிகை படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை தயாரிப்பாளர் - ராமாநாயுடு:
சுரேஷ் புரொடெக்ஷன் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம், 13 இந்திய மொழிகளில் 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ராமாநாயுடு. இவர் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.1936 ஜூன் 6ம் தேதி ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் கரம்சேடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின், லயோலா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் இவர் கவனம் முழுவதும் படிப்பில் இல்லாமல் நாடகத்துறையிலேயே இருந்தது. படிப்பை பாதியிலேயே கைவிட்டார். சொந்த ஊரில் ரைஸ் மில் மற்றும் பஸ் நிறுவனத்தை தொடங்கினார். பின் அப்பகுதியில் இயங்கிய ஷாம்பு பிலிம்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தார். பின் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டார். இத்தொழில் நன்றாக சென்றாலும் அவரது மனம் சினிமா தயாரிப்பதிலேயே இருந்தது. இதனால் 1962ல் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரது உறவினர் தொடங்கிய அனுரூபா தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் "அனுராகம். பின் தனது சிறுவயது நண்பர் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து தனது மகன் பெயரில் "சுரேஷ் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்ட முதல் திரைப்படமான "ராமுடு பீமுடு படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின் இந்நிறுவனம் சார்பில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகின. 1989ல் ராமாநாயுடு ஸ்டுடியோ தொடங்கினார். 1990ல் ராமாநாயுடு கலர் லேப் தொடங்கப்பட்டது. 1994ல் சினி கிராமம் ஒன்றை உருவாக்கினார். இவர் 24 இயக்குனர்கள், சில நடிகர்கள் மற்றும் சில இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 13வது லோக்சபாவுக்கு (1999 - 2004) எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட இவர் தோல்வியுற்றார். 2009ம் ஆண்டு திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகிப் பால்கே விருது பெற்றார். 2012ல் இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. ஒரு தேசிய விருது, 3 முறை பிலிம் பேர் விருது, 5 முறை "நந்தி விருதுகளை பெற்றுள்ளார். திருப்பதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.