அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
படத்தின் தலைப்பில் இருப்பதுபோல தனக்கும் எக்ஸ்ட்ராவாக ஒரு அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த ஹீரோ படுத்தும்பாட்டைத்தான் ஒட்டுமொத்த யூனிட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறது. தொட்டதிற்கெல்லாம் அந்த வாரிசு நாயகன் மூக்கை நுழைப்பதுடன், குறை சொன்னதால் கடுப்பான முன்னணி ஆர்ட் டைரக்ரட் தோட்டா தரணியே பேக்கப் சொல்லி விலகி விட்டார் படத்தில் இருந்து. முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். பெரிய பெரிய நடிகர்களே என்னை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை" என்று கூறி விலகிவிட்டார் தோட்டா.
அந்த குள்ளமான ஹீரோவின் தொல்லை தாங்காமல் விலகிய தோட்டாவின் கதை இப்படியென்றால், படத்தின் கேமராமேன் ரவி கே.சந்திரன் ஏக டென்ஷனில் இருக்கிறாராம். ஷாரூக்கான், அமீர்கானையெல்லாம் பார்த்த அவருக்கே கேமராவை இப்படி வையுங்க, லைட்டிங் இப்படி இருந்தால் பெட்டர், அந்தக் கோணம் வேணாம், இது ஓ.கே. என்றெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாராம் அந்த ஹீரோ. இதனால் கடுப்பான ரவி, யோவ் இன்னொருவாட்டி அந்தாளு என்கிட்ட வந்தா, நானே பேக்கப் சொல்லிட்டு போயிடுவேன்" என்று இயக்குநரிடம் கடித்து விட்டாராம்.
படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றும் மாஸ்டர் பீட்டர் ஹெய்னும் ஹீரோ மீது கோபத்தில்தான் இருக்கிறாராம். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வேறு வழியில்லாமல் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் டைரக்டர். படத்தின் பெயரில் இருப்பதுபோல தனக்கும் எக்ஸ்ட்ராவாக ஒரு அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த ஹீரோ படுத்தும்பாட்டைத்தான் ஒட்டுமொத்த யூனிட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறது.