ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
''ஸ்டூடண்ட் ஆப் தி இயர்'', ''மெயின் தேரா ஹீரோ'', ''ஹம்தி ஷர்மா கி துல்கனியா'' என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் ஹாட் அண்ட் ஹேண்ட்சம் ஹீரோ வருண் தவான். இவர் நடித்துள்ள பட்லாபூர் படம் வௌ்ளியன்று(பிப்., 19ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இப்படம் குறித்தும், இப்படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து வருண் தவான் கூறியதாவது...
* பட்லாபூர் படம் பற்றி...?
இதற்கு முன்னர் நான் நடித்த மூன்று படங்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமாக, இதுவரை நான் நடித்திராத ஒரு கதாபாத்திரமாக ''பட்லாபூர்'' படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது பெயர் ரகு. படத்தில் நான் மிகவும் கோபக்காரன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அப்படிப்பட்டவன் கிடையாது. இப்படியொரு கேரக்டரில் நடித்தது மகிழ்ச்சி.
* ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்லுங்கள்.?
என்னை பொறுத்தமட்டில் இப்படத்தின் ஷூட்டிங்கில் நடித்தது கஷ்டமாக இருந்தது. மகாராஷ்டிராவில் உள்ள இகாத்புரி என்ற இடத்தில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு மின்சாரம் இல்லாததால் பேன், ஏசி., உள்ளிட்ட எதுவும் கிடையாது. அதனால் நிறைய கஷ்டங்கள் அனுபவித்தேன். இந்த கேரக்டரோடு நான் ஒன்றிணைந்து போக வேண்டும் என்பதற்காக அந்த இடத்தை தேர்வு செய்தார் இயக்குநர் ஸ்ரீராம்.
* பட்லாபூர் கதையை எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள்...?
முழுக்க முழுக்க பட்லாபூர் படத்தின் கதைக்காகத்தான் இதில் நடித்தேன். படத்தின் கதை அவ்வளவு பிடித்திருந்தது . என்னை பொறுத்தவரை இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். பொதுவாக இயக்குநர்கள் ஹிட் படமும் கொடுப்பார்கள், பிளாப் படமும் கொடுப்பார்கள். இயக்குநரான என் அப்பாவே ப்ளாப் படங்கள் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் இயக்குநர் ஸ்ரீராமின் முந்தைய படமான வினோத் ஏஜென்ட் படமும் கூட தோல்வி படம் தான். ஆனாலும் அவர் சொன்ன பட்லாபூர் கதை பிடித்ததால் நடித்தேன்.
* ஆக்ஷ்ன் - காமெடி எந்த படங்களில் நடிக்க ஆசை.?
நிச்சயமாக எனக்கு காமெடி படங்களில் நடிக்கத்தான் ஆசை. ஏனென்றால் நிஜத்தில் நானே பெரிய காமெடியன். மக்களை சிரிக்க வைப்பதில் எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது. அந்தவகையில் எனது முந்தைய இரண்டு படங்கள் காமெடி படமாகத்தான் வந்தது. ஆனால் பட்லாபூர் படம் அப்படி கிடையாது. இது ஒரு ஆக்ஷ்ன் படம். பட்லாபூரை காட்டிலும் எனது முந்தைய படங்களின் ரோல் தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
* உங்களின் பலம் என்ன.?
எனது இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ...? அதை அப்படியே கேட்பவன் நான். சொல்லப்போனால் என் வெற்றியின் ரகசியமும், என் பலமும் இது தான். எனக்கு மட்டும் கிடையாது, எல்லோருக்கும் இது பொருந்தும். இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் ஆக்ஷ்ன் படம் பண்ணுவேன் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. இயக்குநர் ஸ்ரீராமால் இது நடந்துள்ளது.
* உங்களை அதிகம் ஊக்குவிப்பது யார்.?
இரண்டு பேர் உள்ளார்கள். ஒருவர் எனது சகோதரர். மற்றொருவர் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்... உங்களது ஆதரவின்றி நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. பட்லாபூர் படத்தின் போஸ்டரை முதன்முலில் நான் சமூகவலைதளத்தில் போட்டபோது அதை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தவர்கள் நீங்கள். இந்தப்படம் பெரிய பட்ஜெட் படம் கிடையாது. சுமார் ரூ.25 கோடியில் தான் உருவாகியுள்ளது. ஆனால் இதை பெரிய பட்ஜெட் படம் போன்று எல்லோரும் பார்க்கிறார்கள்.
* யாமி கௌதம் உடன் நடித்த அனுபவம் பற்றி.?
அன்பும், அழகும் நிறைந்த அருமையான நடிகை யாமி கௌதம். அவரிடம் பலவிதமான நடிப்பு திறமை உள்ளது, அதை பார்த்து பிரமித்துள்ளேன். மேக்கப் இல்லாமல் கூட யாமி கௌதம் அவ்வளவு அழகாக இருப்பார்.
* உங்கள் வாழ்க்கையில் எதை தவறவிடக்கூடாது என்று நினைக்கிறீர்கள்.?
சிரித்தபடி.., ஆமாம், பட்லாபூர் படத்தின் தலைப்பில், ''ஆரம்பத்தை தவறவிடாதீர்கள்...'' என்று கூறியுள்ளோம். என் நிஜ வாழ்க்கையிலும் நான் எதையும் தவறவிட்டதில்லை. ஒரு படத்தில், கமிட்டாவதற்கு முன்னரே அந்தப்படம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதன்பின்னர் தான் அதற்கான வேலைகளில் இறங்குவேன். என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான்.
இவ்வாறு வருண் தவான் கூறியுள்ளார்.