'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அம்பிகா, ராதா, ஸ்ரீதேவி என 80களில் கனவு கன்னிகள் உலாவந்த நேரத்தில் அடக்கமான நடிகையாக சில படங்களில் நடித்து விட்டு கேரளா பக்கம் ஒதுங்கி விட்டவர் நடிகை மேனகா. அங்கு 100 படங்கள் வரை நடித்த மேனகா தயாரிப்பாளர் சுரேசை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது அவர் மகள் கீர்த்தி சுரேஷ் தமிழ்நாட்டுக்கு நடிகையாக திரும்பி வந்திருக்கிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* திடீரென்று நடிக்க வந்து விட்டீர்களே?
திடீரென்று நடிக்க வரவில்லை. எனது நீண்ட நாள் பிளான்தான் இது. குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தேன். அப்பாவுக்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் எனது நடிப்பு ஆசையை அவரிடம் சொல்லவில்லை. 12ம் வகுப்பு முடித்து விட்டு சொன்னேன். இன்னும் நிறைய படி அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிட்டார். பிரியதர்ஷன் அங்கிள்தான் என்னை பார்த்துவிட்டு கீதாஞ்சலியில் ஹீரோயின் ஆக்கினார். பெரிய இயக்குனர், மோகன்லால் சார் நடிக்கிற படம் என்பதால் அப்பாவால் தடுக்க முடியவில்லை. அடுத்த படமே திலீப்புடன் ரிங் மாஸ்டர். அதையும் தடுக்க முடியவில்லை. சரி உன் ஆசைப்படியே நடி என்று சொல்லிவிட்டார். நானும் நடிக்க வந்துவிட்டேன்.
* தமிழில் நடிக்க வந்தது எப்படி?
அதற்கும் ப்ரியதர்ஷன் சார்தான் காரணம். ஏ.எல்.விஜய் சார் இது என்ன மாயம் படத்துக்கு ஹீரோயின் தேடினப்போது ப்ரியதர்ஷன் சார்தான் என்னை அறிமுகப்படுத்தி வச்சார். அவருக்கும் பிடித்துப்போகவே தமிழுக்கும் வந்தாச்சு.
* எடுத்த எடுப்பிலேயே விக்ரம்பிரபு, சிவகார்த்திகேயன், சிம்ஹான்னு இளம் ஹீரோக்களுடன் ஜோடி போடுறீங்களே-?
எல்லாமே கடவுள் புண்ணியத்துல கடகடன்னு அமைந்தது. ரஜினி முருகன்ல மதுரை பொண்ணு வேடம். அதுல என்னோட மனோபாலா சார் நடிச்சார். நடிக்கும்போது என்னோட படத்துலேயும் நீதான் ஹீரோயின்னு சொன்னார். ஏதோ தமாஷ் பண்ணுறார் என்றுதான் நினைச்சேன். அப்புறம் நிஜமாகே பாம்பு சட்டையில ஹீரோயின் ஆக்கிட்டார். கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.
* தமிழ் படத்தில் நடிக்கிறத எப்படி ஃபீல் பண்றீங்க-?
அம்மா சிவாஜி சாரோட நடிச்சிருக்காங்க. நான் சிவாஜி சாரோட பேரன் விக்ரம் பிரபு கூட நடிக்கிறேன். அம்மா ரஜினி சார்கூட நடிச்சிருக்காங்க. நான் அவர் பெயரை டைட்டிலாக கொண்ட படத்தில் நடிக்கிறேன். அம்மா தமிழ்ல நடிச்சது 15 படங்கள்தான் நான் 100 படமாவது நடிக்கணும்.
* தமிழ் நல்லா பேசுறீங்களே எப்படி?
ஹலோ... நான் பக்கா தமிழ் பொண்ணுங்க. எங்கம்மா அக் மார்க் தமிழ். அப்பா மலையாளி அதனால எனக்கு இரண்டு மொழியும், இரண்டு மாநிலமும் சொந்தம். இரண்டு மொழியும் நால்லா பேசுவேன். அதனால் என்னை மலையாள நடிகைன்னு எழுதாதீங்க. தமிழ் நடிகைன்னே எழுதுங்க. ரஜினி முருகன்ல மதுரை ஸ்லாங்க சொந்த குரல்ல பேசுறேன். அதுக்கு பிறகு என்னை மலையாள பொண்ணுன்னு சத்தியம் பண்ணினாக்கூட நம்ப மாட்டாங்க.
* மேனகா கிளாமராக நடிச்சதில்ல. நீங்க எப்படி?
அது அம்மாவோட காலகட்டம். இப்போ கிளாமரா நடிக்க மாட்டேன்னு சொல்ல முடியாது. அதுக்காக ரொம்பவும் கிளாமராக நடிக்க முடியாது. என்னோட உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் நடிக்கலாம். கதையும், கேரக்டரும் கேட்கிற வகையில் நடிக்கலாம். கிளாமரை திணிச்சா ஏத்துக்க முடியாது.
* உங்களோட ட்ரீம் ரோல் எது?
அப்படி எதுவும் தனியாக கிடையாது. வலுவான கேரக்டர்களில் நடிக்க ஆசை. மூன்றாம் பிறை ஸ்ரீதேவி, குயின் கங்கனா ரணாவத், கஹானி வித்யா பாலன், மனதில் உறுதி வேண்டும் சுஹாசினி மாதிரி கேரக்டர்களில் நடிக்கணும்.
* விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், சிம்ஹா எப்படி?
விக்ரம் பிரபு ரொம்ப அமைதி. அதிகம் பேச மாட்டார். ஷாட் இல்லேன்னா தனியாக போய் உட்கார்ந்துக்குவார். பேசும்போது சின்னதாக ஒரு சிரிப்பு முகத்துல ஒட்டிக்கிட்டிருக்கும். சிவகார்த்திகேயன் அதுக்கு நேர் எதிர். ஜோக் அடிப்பார், சிரிக்க வைப்பார், சினிமா பற்றி அப்டூடேட் இன்பர்மேஷன் சொல்வார். சிம்ஹா கூட இன்னும் நடிக்க ஆரம்பிக்கல. அவர் நடிச்ச ஜகிர்தண்டா பார்த்துட்டு மிரண்டிருக்கேன்.
* சினிமாவுக்கு வரும்போது அம்மா சொன்ன அட்வைஸ் என்ன?
கூப்பிட்டு உட்காரவச்சு எந்த அட்வைசும் பண்ணல. நேரந்தவறாமை, எல்லோரையும் சமமாக மதிக்கணும் இதுதான் அம்மா சொன்ன அட்வைஸ். அதனால்தான் காலையில 7 மணிக்கு சூட்டிங் என்றால் 6.30க்கு மேக்அப்போடு தயாராக நிற்கிறேன். டைரக்டர்லேருந்து லைட் மேன் வரைக்கும் மரியாதை கொடுக்கிறேன். இந்த குணம் கடைசி வரைக்கும் இருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.
* எதிர்கால திட்டம் என்ன?
அப்படின்னு எதுவுமே இல்லை. வாழ்க்கை போகிற போக்கில் ஜாலியாக போயிடுறேன். பேஷன் டிசைன் படிக்க ரொம்ப ஆர்வமாக இருந்தேன். நடிகையானதும் அதை விட்டுவிட்டேன் அதற்காக வருத்தப்படவில்லை. நாளை சினிமாவை விட வேறு வாய்ப்புகள் வரலாம். சினிமாவிலேயே பெரிய இடம் கிடைக்கலாம். எதுவுமே இல்லாம வீட்டில் இருக்கலாம். எல்லாற்றையும் பாசிட்டிவா எடுத்துக்கிட்டு உடம்பை ஆரோக்யமாகவும், மனதை சந்தோஷமாகவும் வச்சிக்கிட்டு லைஃபை என்ஜாய் பண்ணணும்.