'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட்டில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஹரி தான், தாமிரபரணி படத்தில் பானுவை அறிமுகப்படுத்தினார். பிழைக்க தெரிந்த நயன்தாரா இன்று வரை கொடிகட்டி பறக்கிறார். இளசு, பெரிசு என பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் நடித்து விட்டார். ஆனால், பானு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே நடித்துள்ளார். இதற்கான காரணத்தை பானு தான் கணக்குப் போட வேண்டும். இந்நிலையில் மலையாளம், தெலுங்கு என்று பானுவுக்கு விழுந்த இடைவெளிக்கு காரணம் சொன்னாலும் மீண்டும் சரிந்த இடைவெளியை சரி செய்து தமிழ் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என முடிவு எடுத்து விட்டார். தற்போது சந்தானம் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் திரைக்கு வந்தால் எல்லா இயக்குனரின் பார்வையும் தன் மீது விழும் என்று நம்புகிறார். அடுத்து, பாம்பு சட்டை படத்தில் முன்னணி பாத்திரத்தில் பாபிசிம்ஹா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் பெரும்பகுதி நடப்பதால் சென்னையிலேயே தங்கி நடித்து வருகிறார் பானு. இதிலிருந்து பானுவின் திட்டம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார் பானு.