ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவா சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை எப்படி அறிமுகமாகிறாரோ அவரை அப்படியே கடைசி வரை நடிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள், இதில் சில நடிகைகள் மட்டும் உஷாராக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவர்களை சினிமாவில் நிலைத்து நிற்கும்படி செய்துகொள்வார்கள், இதில் சமீபத்தில் நடிகை நித்யா மேனனை தான் அனைவரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். ஹிரோயினாக அறிமுகமான இவர் தற்போது அல்லு அர்ஜுனின் தங்கையாக சன் ஆஃப் சத்யமூர்த்தி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் நிறையபேர் நீங்க ஏன் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் இனி சினிமா வாய்ப்பு குறையாதா என்று கேட்டார்களாம் இதற்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகை நித்யா மேனன்.
அவர் கூறியதாவது, “தங்கை வேடத்தில் நடித்தால் சினிமா வாய்ப்பு குறையுமென்று யார் சொன்னார்கள், மக்களால் பேசப்படும் ஒரு கதாபாத்திரம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒன்றாகவிடுகிறது, இதில் நான் மட்டுமென்ன விதிவிலக்கா?, அதுமட்டுமின்றி நடிகை சாவித்ரி என்டிஆருக்கு தங்கையாக நடித்து அதன்பின் பல படங்களில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார், மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் கூட ஷாருக்கானின் ஜோஷ் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அதன்பின் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்” என்று பல உதாரணங்களை சொல்லிக் கொண்டேபோகிறாராம் நித்யா மேனன்,
இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனனுடன் தான் இணைந்து இன்னொரு படமும் நடிப்பேன் என்று அல்லு அர்ஜுன் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.