டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன். ''கை வந்த கலை'' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ்சினிமாவில் அறிமுகமானார் இவர். தொடர்ந்து வைதேகி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் சினிமாவில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முயற்சித்து வருகிறார். தற்போது அவர் வாய்மை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தனு, ராம்கி, தியாகராஜன், கவுண்டமணி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவர்களோடு ப்ரித்வியும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், வாய்மை படத்தில் எனது நண்பர் சாந்தனு முக்கியமான ரோலில் நடித்தார். அப்போது பாக்யராஜ் சார் என்னிடம் போன் பண்ணி இதில் ஒரு ரோல் இருக்கிறது நீ செய் என்று சொன்னார்... அதன்படி கதையை கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்து போனது, நானும் இதில் நடித்தேன். சமீபகாலமாகத்தான் தமிழ் சினிமாக்களில் இரண்டு-மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது அதிகமாகியுள்ளது. இது நல்ல விஷயம்.
நான் ஒரு பெரிய நடிகர், இயக்குநரின் மகன் என்று எண்ணி ஒருபோதும் வீட்டில் அமர்ந்தது கிடையாது. நானே மற்றவர்களிடம் வாய்ப்பு தேடி செல்கிறேன். பாலா, சுசீந்திரன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரிடம் சென்று வாய்ப்பு கேட்டு வருகிறேன். விஷால், விஜய் சேதுபதி ஆகியோருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. வாய்மை படத்திற்கு பிறகு அப்பா இயக்கத்தில், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். விரைவில் இப்படம் துவங்க இருக்கிறது