ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சமீபத்தில் வெளிவந்த லிங்கா படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாகப் போகவில்லை. படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள். எங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம். அதனை தயாரிப்பாளரிடமிருந்து ரஜினி பெற்றுத் தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் லிங்கா பிரச்னையில் ரஜினியை இழிவுபடுத்துவதை தயாரிப்பாளர் சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 'லிங்கா' பட பிரச்னையில் விநியோகஸ்தர்கள் பட வெளியீட்டிலிருந்து தொடர்ந்து 'லிங்கா' படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கும், விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மிறி பல்வேறு பிரச்னைகள் செய்து வருகிறார்கள்.
கடந்த காலங்களில் ரஜினிகாந்த் நடித்த சுமார் 97 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. இந்த சூழ்நிலையில் 'லிங்கா' படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும்.
அதைவிடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது நமது தொழில் தர்மத்திற்கு மாறானது. மேலும் அது கண்டனத்திற்குரியது. திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேவையற்ற முறையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது. எனவே உண்மையில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும். தவிர இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது திரையுலக்கிற்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமல்ல தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் தவறாமல் வாக்களித்திருக்கிறார். சங்கத்தின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால் இந்த பிரச்னை பற்றி இதுவரை நடிகர் சங்கம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. "சின்ன பிரச்னைகளுக்கு கூட தினமும் அறிக்கை வெளியிடும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இந்த பிரச்னையில் மவுனமாக இருப்பது ஏன் என்றும் புரியவில்லை" என்கிறார்கள் மற்ற முன்னணி நடிகர்கள்.