ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் யானைக்கும், மனிதனுக்குமான உறவை சொன்னது. அதே பாணியில் இப்போது பீடி என்ற படம் உருவாகி இருக்கிறது. ஜெயராம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் ஜெ.சண்முகம் தயாரித்திருக்கிறார். ஸ்மித்குமார் இயக்கி உள்ளார். உத்பல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இயக்கி உள்ளார்.
"கும்கி படத்தின் சாயல் இருந்தாலும், அந்த கதைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. மலைவாழ் மக்களின் மலைகிராமம் ஒன்றில் டீக்கடை நடத்தி வரும் ஹீரோவின் வாழ்க்கையில், வழி தவறி ஒரு யானைக்குட்டி வந்து சேர்கிறது. அதன் மீது அன்பு செலுத்துகிறான் ஹீரோ. அதனை சுதந்திரமா காட்டுக்குள் அலையவிட்டு வளர்க்கிறான். ஆனால் இந்த சமூகமும், அரசும் அவனையும், யானையையும் பிரிக்க பார்க்கிறது. காதலுக்கும் யானையே தடையாக இருக்கிறது. இறுதியில் என்ன முடிவு என்பது கதை.
யானையை வைத்து என்ன செய்ய முடியுமோ அதை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கணேஷ் என்ற வளர்ப்பு யானையை ஒரு மாதம் வரை நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். கொடைக்கானல், மூணார் பகுதி காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. திலக்மோகன், ஆர்சா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். திலக்மோகன் பல மாதங்களாக யானையுடன் பழகிய பிறகே படப்பிடிப்பு நடத்தினோம். இது கண்டிப்பாக வித்தியாசமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ஸ்மித்குமார்.