ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்துள்ள சண்டமாருதம் படம் வருகிற 20ந் தேதி வெளிவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 250 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து சரத்குமார் கூறியதாவது: முதன் முதலாக நானே கதை, திரைக்கதை எழுதியிருக்கும் படம் சண்டமாருதம். நீண்ட நாள் என் மனதில் இருந்த கதை இப்போது சினிமாவாகி இருக்கிறது. பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு வில்லன். பணத்தை கால்தூசுக்கு சமமாக கருதும் நேர்மையான போலீஸ் அதிகாரி, இந்த இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் கதை.
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியை நாடு பாராட்டினாலும், அவரது குடும்பமும், குழந்தையும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது இதுவரை சொல்லப்படாத விஷயம். நான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வில்லனாகி இருக்கிறேன். நான், ராதிகா, லிஸ்பன் ஸ்டீபன் இணைந்து தயாரித்திருக்கிறோம்.
படத்தை பார்த்த பலரும் ஆர்வமுடன் வாங்கி இருக்கிறார்கள். கலைப்புலி எஸ்.தாணு சென்னை சிட்டி ஏரியாவை வாங்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் 250 தியேட்டர்களிலும் மற்ற மாநிலங்களில் 100 தியேட்டரிலும் வெளிவருகிறது. ஆந்திராவில் அடுத்த வாரம் ரிலீசாகிறது. என்றார்.