‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவில் கமல்-ரஜினி என்ற இரு துருவங்கள் வலம்வந்து கொண்டிருந்தபோது, 3வதாக களமிறங்கியவர் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் வருடத்துக்கு தனது நடிப்பில் மூன்று நான்கு படங்கள் வரை வெளியிட்டு பிசியான நடிகரானார்.
அதோடு, ஆக்சனில் முத்திரை பதித்து வந்த விஜயகாந்தின், சண்டை காட்சிகளுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் வட்டமும் உருவானது. அதனால் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி, சண்டை காட்சிகளை வித்தியாசப்படுத்தி வந்த விஜயகாந்த், அதிகமான படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்தார். ஆனால், தற்போது அவர் முழுநேர அரசியல்வாதியாகி விட்டதால், நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.
இந்தநிலையில், அவர் இடத்தை பிடிக்கும் முயற்சியில் தற்போது களமிறங்கியிருக்கிறார் ஆர்கே. எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம், அவன் இவன், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்துள்ளர். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே, நேற்று தனது அடுத்த படமாக வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தையும் தொடங்கி விட்டார்.
ஏற்கனவே அவர் நடித்த எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷே, என் வழி தனி வழி மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் படங்களை இயக்குகிறார். அதோடு, என் வழி தனி வழி படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ஆர்கே, வைகை எக்ஸ்பிரஸ் படத்திலும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படி அவர் ஆக்சன் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு முக்கிய காரணமே அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் ஒரு ஆக்சன் ஹீரோவாகி விஜயகாந்த் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதானாம். இதை நேற்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தொடக்க நாளின்போது நடந்த பிரஸ்மீட்டில் அப்படக்குழுவினர் ஆர்கே முன்னிலையிலேயே தெரிவித்தனர். அப்போதும் தனது விருப்பம் அதுதான் என்பதுபோல் தலையசைத்தபடி அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துக்கொண்டிருந்தார் ஆர்கே.