விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
சமீபகாலமாக நடிகை நமீதாவுக்கு எந்த படவாய்ப்பும் இல்லை. ஆனபோதும், குஜராத்திலுள்ள சூரத் நகரை பூர்வீகமாக கொண்ட அவர், சென்னையிலேயே நிரந்தரமாக தங்கியிருந்து வருகிறார். அதோடு, கடை திறப்பு விழாக்கள், உள்நாடு, வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில், தனது சொந்த ஊரான குஜராத்தில் அவ்வப்போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த நமீதா, சமீபத்தில் அங்கு நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடனமாடியிருக்கிறார். ஆனால், இதுவரை அவருக்கு சொன்னபடி சம்பளம் கொடுத்து வந்த அந்த நிகழ்ச்சியில் மேனேஜர், இந்த முறை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் நமீதா. அதோடு, தன்னை குஜராத் கலைநிகழ்ச்சியின் மேனேஜர் மோசடி செய்த செய்தியை வெளியிட்டுள்ள நமீதா, யாராக இருந்தாலும் முன்கூட்டியே பேசிய சம்பளத்தை கையில் வாங்காமல் நடனம் ஆடாதீர்கள் என்றும் தனது சக நடிகர் நடிகைகளை கேட்டுக்கொண்டுள்ளார்.