ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி பாடிய மண் இந்த மண். அரசியல் கட்சிகளின் மறைமுகமான தூண்டுதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜாதி கலவரங்கள் நடந்தபோதும், பொதுவாக தமிழகம் ஜாதிகளை கடந்து நிற்கிற பூமி. ஆனால் இங்கு நடிக்க வருகிற நடிகைகள் தங்கள் ஜாதி அடையாளங்களோடுதான் வருகிறார்கள். கேரளாவில் இருந்து வந்தாலும் சரி, மும்பையிலிருந்து வந்தாலும் சரி தங்கள் ஜாதி அடையாளத்தை தாங்கியபடிதான் வருகிறார்கள்.
ஜாதி மதங்களை கடந்தது சினிமா என்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. இலைமறை காயாக சினிமாவுக்குள் ஜாதிகள் இருந்தாலும் நடிகைகள் மட்டும் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளங்களை வெளிப்படையாக போட்டுக்கொள்கிறார்கள். அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா ரெட்டி, மேக்னா நாயுடு, லட்சுமி மேனன், மாளவிகா நாயர், பார்வதி மேனன், ஜனனி அய்யர், அக்ஷரா கவுடா, அபர்னா நாயர், நவ்யா நாயர், அருந்ததி நாயர், காஜல் அகர்வால், மனீஷா யாதவ், கீர்த்தி ஷெட்டி, நித்யா மேனன், சமீரா ரெட்டி, சஞ்சனா சிங், ஷில்பா ஷெட்டி, ஸ்வேதா மேனன், யானா குப்தா இப்படி ஜாதி அடையாளங்களோடு வலம்வரும் நடிகைகள் ஏராளம். தமிழ்நாட்டைச் சேர்ந்த த்ரிஷாவோ, சினேகாவோ, விஜயலட்சுமியோ, மீனாவோ, தன்ஷிகாவோ, வரலட்சுமியோ, ப்ரியா ஆனந்தோ ஜாதி அடையாளங்களை போட்டுக்கொள்ளாதது ஆறுதலான விஷயம்.
நடிகைகள் தங்கள் ஜாதி அடையாளங்களை தங்களுக்கான கவுரமாக நினைக்கிறார்களா? அல்லது பாதுகாப்பாக நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. எந்த நடிகைக்கும் ஜாதி பார்த்து யாரும் வாய்ப்புத் தருவதில்லை. வட நாட்டு நடிகைகளின் ஜாதியை சேர்ந்தவர்களும், மேனன்களும், நாயர்களும் தமிழ்நாட்டில் மிக குறைந்த அளவே இருப்பார்கள். பிறகு ஏன் நடிகைகள் ஜாதி அடையாளங்களை தாங்கிப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நடிகர்கள் யாராவது ஜாதி அடையாளங்ளை போட்டுக் கொள்கிறார்களா? ரஜினி கெய்ட்வாட், கமல் அய்யங்கார், சூர்யா கவுண்டர், கார்த்தி கவுண்டர், என்றா நடிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
நடிகைகள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளத்தை போட்டுக் கொள்வது அவர்களது உரிமையாக இருக்கலாம். அனுஷ்கா, ஸ்ரேயா மாதிரி அதனை தமிழ்நாட்டுக்குள் பயன்படுத்தாமல் இருக்கலாமே. ஜாதி அடையாளம் இல்லாத நடிகைகளுக்குத்தான் வாய்ப்பு தருவோம் என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தால் குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்குள்ளாவது நடிகைகள் ஜாதி அடையாளத்துடன் வலம் வராமல் இருப்பார்கள்.