தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றால் 1980ம் ஆண்டுகளைத்தான் சொல்ல வேண்டும். அந்தச் சமயத்தில்தான் நட்சத்திரங்களும் ஜெயித்தார்கள், இயக்குனர்களும் ஜெயித்தார்கள், தயாரிப்பாளர்களும் ஜெயித்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் ஒரு பக்கம் ஓடினாலும் மறு பக்கம் பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், போன்றவர்களும் ஜெயித்தார்கள். பாரதிராஜா, பாலசந்தர் இயக்கிய படங்கள் ஓடினால் மறுபக்கம் ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு போன்ற இயக்குனர்களின் படங்கள் ஓடின. ஏற்றத் தாழ்வு என்பது இல்லாமல் நல்ல கதைகளும், நல்ல திரைக்கதை கொண்ட படங்களும் வெற்றி பெற்றன.
அப்போது கதைகள்தான் பிரதானமாக இருந்தன. இயக்குனர்கள் கையில்தான் சினிமா இருந்தது. ஆனால், இப்போது நிலைமையே வேறு. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஆர்.சுந்தர் ராஜன் பேசும் போது, 'ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதைதான் முக்கியமானது,” என்றார். 'பயணங்கள் முடிவதில்லை' போன்ற படங்களின் திரைக்கதை ஒரே நாளில் அமைக்கப்பட்டது என்று அந்தக் குழுவில் நண்பனாக இருந்த பி.வாசு தெரிவித்தார். அப்போதெல்லாம் வினியோகஸ்தர்களிடம்தான் கதையைச் சொல்வோம். அவர்கள் கணிப்பது சரியாக இருக்கும் என்கிறார் பி.வாசு. “எனக்கு ஒருவரிடம் போய் கதையைச் சொல்லத் தெரியாது. அதனால், பி.வாசு, சந்தானபாரதி ஆகியோரை அனுப்பி கதையைச் சொல்லச் சொல்வேன். அவர்கள் கதை சொல்லி படத்தை ஓகே செய்து வருவார்கள், பின்னர் படப்பிடிப்புக்குச் செல்வோம்,” என்கிறார் சுந்தர்ராஜன்.
ஒரு இயக்குனருக்காக மற்றொரு இயக்குனர் கதை சொன்ன சம்பவம் இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஆச்சரியமான ஒன்று. அப்போதைய இயக்குனர்களின் நட்பு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.