சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் |
அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வது, சமூக பிரச்சனைகளில் கருத்து சொல்வது என அரசியலில் எந்நேரமும் இறங்க தயார் நிலையிலயே இருப்பவர் சுரேஷ்கோபி. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியதால் இப்போதுவரை, அவர் பிஜேபியில் சேரப்போகிறார் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்க, ஆரம்பத்தில் இருந்தே அதை மறுத்து வந்தார் சுரேஷ்கோபி.
அதுமட்டுமல்ல.. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அளித்துள்ள பேட்டியில் மக்களுக்கு சேவை செய்வதற்காக எந்த கட்சியிலும் சேர தயாராக இருப்பதாகவும், அதற்காக அதிகாரங்களையும் நிறைய உறுப்பினர்களையும் வைத்திருக்கும் கட்சியில் தான் சேரவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் தனக்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த கருத்தையும் தற்போது ஆம் ஆத்மி டில்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதையும் ஒன்று சேர்த்து அவர் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை என மறுத்திருக்கிறார் சுரேஷ்கோபி..
இரண்டு தினங்களுக்கு முன் பி.ஜே.பியை சேர்ந்த தலைவர் ஒருவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலதுகொண்ட சுரேஷ்கோபி, “சிலர் நான் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.. அவர்களுக்கு உள்ளுக்குள்ளே ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதற்கேற்ற மாதிரித்தான் செயல்பாடுகளும் இருக்கின்றன” என்று சீறினார். ஆனாலும் தற்போது ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி சரியான நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது என இறுதியில் அவர் பாராட்டியதுதான் ஹைலைட்.