தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சசி இயக்கிய பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாள நடிகையான இவர் அந்த படத்தில் தனது உடம்பை கருப்பாக மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார். ஆனால் அப்படி சிறப்பாக நடித்த பார்வதிக்கு அதன்பிறகு தமிழில் படமே இல்லை. அதனால் மீண்டும் மலையாள படங்களில் நடித்து வந்தார். அதையடுத்து, 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்து பார்வதிமேனன் என்ற பெயரில் மரியான் படத்தில் நடித்தார் அவர். பூ படத்தை விட இன்னும் மெருகேறியிருந்த பார்வதிமேனன், மீனவ கிராமத்து பெண்ணாகவே மாறி தனுஷை உருகி உருகி காதலித்தபடி நடித்தார். அவரது நடிப்பு ஒவ்வொரு காட்சியிலுமே பேசப்படும்படியாக இருந்தது.
ஆனபோதும், அதன்பிறகும் வழக்கம்போல் பார்வதிக்கு புதிய தமிழ் படங்கள் புக்காகவில்லை. சென்னையில் ஒருநாள் படத்தில்கூட ஒரு கேரக்டரில் மட்டுமே நடித்தவர், இப்போது கமலின் உத்தமவில்லனிலும் ஜெயராமின் மகளாக ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அந்த படத்தைப் பொறுத்தவரை பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோருக்குத்தான் கதாநாயகி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்பிறகும் அவரை கதாநாயகி வேடங்களுக்காக யாருமே அணுகவில்லை. ஆனால் மலையாள சினிமாவில் இதுவரை 10 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து விட்ட பார்வதிமேனன் இப்போதும் இரண்டு படங்களில நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதனால், தமிழ் சினிமா தனக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்று பீல் பண்ணும் பார்வதிமேனன், கிளாமராக நடிக்க மாட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை ஓரங்கட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் தனது அபிமானத்திற்குரிய கோலிவுட் நண்பர்களிடம் கூறி வருகிறார் பார்வதிமேனன்.