டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அழகும், திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லையே என்று புலம்புகிறார் நடிகை டாப்சி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வௌ்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து, ''வந்தான் வென்றான்'', ''ஆரம்பம்'' படங்களில் நடித்தவர் இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் ''முனி-3 கங்கா'' படத்திலும், கௌதம் கார்த்திக்கின் ''வை ராஜா வை'' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இதனிடையே தெலுங்கு படங்களிலும் நடித்த டாப்சி, சமீபத்தில் இந்திக்கும் சென்றார். மூன்று மொழி நடிகையான பின்னரும் டாப்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லை, இதனால் விரக்தியில் இருக்கிறார் டாப்சி. அந்த விரக்தியை இப்படி கூறியுள்ளார். அதாவது, என்னிடம் அழகும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது. ஆனால் படங்கள் பெரிதாக இல்லை, இது எனக்கு வருத்தத்தை தருகிறது. படித்துமுடித்து விட்டு பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என் தலையெழுத்து சினிமாவுக்கு வந்துவிட்டேன். இந்த துறையை தேர்ந்தெடுத்தது தவறோ என்று உணர்கிறேன் மேலும் இந்த சினிமாவிற்கு வந்ததற்காக வருத்தமும் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.