தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆல் இந்தியா பச்சோட்டான - ஏ.ஐ.பி., என அழைக்கப்படும், நகைச்சுவையாளர் குழுமம், மும்பையில், கடந்த டிசம்பரில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில், பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அன்ஜுன் கபூரை மேடையில் அமர வைத்து, எட்டு பேர் அடங்கிய குழுவினர், மாற்றி மாற்றி கலாய்த்தனர். இதை நடத்தியவர் கரண் ஜோகர்.இந்த கலாய்ப்புகளில், ஆபாச வார்த்தைகள், வசனங்கள், நையாண்டிகள் மற்றும் நடிகர்களின் குடும்பத்தினரைப் பற்றிய விரசமான விமர்சனங்கள் போன்றவை இடம் பெற்றன. இந்நிலையில், ஏ.ஐ.பி., நாக் அவுட் நிகழ்ச்சி, இந்திய கலாசாரத்திற்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உ.பி., மாநிலம் லக்கோனவில், கைலாஷ் சந்திர பாண்டே என்பவர், கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.