தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் சரணின் ஆஸ்தான நடிகராகிவிட்டார் வினய். மோதி விளையாடு படத்தில் அவருடன் இணைந்த வினய், தற்போது ''ஆயரத்தில் இருவர் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் வெளிவர இருக்கிறது.
அதற்குள் அடுத்த படத்தை அறிவித்து விட்டார் சரண். ஆள் அம்பு சேனை என்பது படத்தின் தலைப்பு. இதிலும் வினய்தான் ஹீரோ. ஹீரோயின் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார். ஆயிரத்தில் இருவர் யூனிட் அப்படியே இதிலும் வேலை செய்கிறது. ஹீரோயின்கள் மட்டும் மாறுகிறார்கள்.
இது ஒரு ஹாலிவுட் படத்தின் பாணியிலான ஜெயில் படம் என்கிறார்கள். ஜெயிலுக்குள் நடக்கும் அக்கிரமங்களை, அநியாயங்களை ஒரு ஜெயில் கைதி தட்டிக் கேட்கிற கதை. வினய் யார், ஏன் ஜெயிலுக்கு போனார் என்பதில் ஒரு சஸ்பென்ஸ் இருக்குமாம். வினய் நடிக்கும் முழுநீள ஆக்ஷன் கதை இது. இதற்காக பிரமாண்ட ஜெயில் ஷெட் போடப்பட்டு அதில் ஒரு மாதம் வரை முதல் ஷெட்யூல் படப்பிடிப்புகள் நடக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.