விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
உலக அழகி ஐஸ்வர்யாராய் உலக அளவில் இந்திய பெண்களின் அடையாளமாக இருக்கிறார். இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையும் அவர்தான். அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்ட ஐஸ்வர்யாராய் தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.
சஞ்சய் குப்தா தயாரித்து இயக்கும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது. இதில் ஐஸ்வர்யாராயுடன் அனுபம் கேர், இர்பான் கான், ஷபனா ஆஸ்மியும் நடிக்கிறார்கள். மும்பையில் நடந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு ஐஸ்வர்யா தினமும் 12 பாதுகாப்பாளர்களுடன் வருகிறார். அவர்களில் மூன்று பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லோர் கையிலும் டார்ச்லைட் இருக்கிறது. டார்ச்சின் பின்புறத்தை தடியாக உபயோகப்படுத்தலாம்.
ஐஸ்வர்யா வீட்டில் இருந்து கிளம்பும்போது தனி வாகனத்தில் தயாராக இருக்கும் இவர்கள் அவரது காருக்கு பின்னால் செல்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் தூரமாக நின்று கொண்டு அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் செல்லும்போது கூடவே சென்று வீட்டில் விடுகிறார்கள். சிவப்பு விளக்கும், ஆம்புலன்சும் மட்டும் இருந்தால் ஒரு அமைச்சரின் கான்வாய் மாதிரி இருக்கும். இந்த பாதுகாவலர்களுக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இதனை தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மக்கள் கூடும் பொது இடங்களில் நடக்க இருக்கிறது. அப்போது ரசிகர்களிடமிருந்து ஐஸ்வர்யாவை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.