‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமீபத்தில் தமிழில் வெளியான ஒரு படத்தில், ஹீரோவின் பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட்டதால் அவரது நாய் அனாதையாகி விடுவது போலவும், அதை ஹீரோ தனது வீட்டிற்கு தூக்கி வந்து அடைக்கலம் கொடுப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது மெகாஸ்டார் மம்முட்டியும் அப்படி ஒரு நாய்க்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். மம்முட்டி காலையில் தினமும் ஜிம்முக்கு போவது வழக்கம்.
நேற்றுமுன் தினம் அப்படி போகும்போது வழியில் தெருவோர கம்பத்தில் நாய் ஒன்று கட்டிப்போடப்படிருப்பதை பார்த்த மம்முட்டி, அங்கிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார்.. அப்போது, தங்களது வீட்டை காலி செய்துபோன ஒரு குடும்பத்தினர் இந்த நாயை மட்டும் அனாதையாக விட்டுவிட்டு போனதாக அங்கிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தனது வீட்டில் ஏற்கனவே சில நாய்களை வளர்ப்பதால், அந்த நாயை பிராணிகள் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தாராம் மம்முட்டி. தனது உதவியாளர் மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து, ஆதரவற்ற நாய்களை பரமாரிக்கும் போனி என்பவரிடம் ஒப்படைத்தும் விட்டாராம். ஒரு நாய்க்காக மம்முட்டியே களத்தில் இறங்கியதைப்பற்றி ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள் அந்த பகுதிவாசிகள்.