ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா நடிகர் நடிகைகளைப்பொறுத்தவரை, படப்பிடிப்பு தளங்களில் ஓய்வு கிடைத்தால் உடனே சீட்டு விளையாடத் தொடங்கி விடுவார்கள். நடிகர் நடிகைகள் என அனைவரும் உட்கார்ந்து விளையாடுவார்கள். அந்தவகையில், லட்சுமிராய் சீட்டு விளையாட உட்கார்ந்தாலே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து விடுவார். அதனால் அவர் ஆட்டத்திற்குள் வருகிறார்கள் என்றாலே, இன்றைக்கு நம்ம பாக்கெட்டை காலி பண்ணாமல் விட மாட்டார் என்ற மனநிலையுடதான் நடிகர் நடிகைகள் உட்காருவார்கள்.
அவரைத் தொடர்ந்து இப்போது தமன்னாவும் சீட்டு விளையாடுவதில் பெரிய புலியாக இருக்கிறாராம். வீரம் படத்தில் நடித்தபோது அஜீத் தவிர அப்படத்தில் நடித்த அனைவரிடமும் விளையாடி தினமும் பல ஆயிரங்களை சம்பாதித்துக்கொண்டிருந்த தமன்னா, இப்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க ஸ்பாட்டிலும் ஆர்யா, சந்தானத்துடன் தினமும் சீட்டு விளையாடுகிறாராம்.
ஆனால் ஆர்யாவும், சந்தானமும் ஜாலியாக விளையாட, தமன்னாவோ ரொம்ப சீரியசாக விளையாடுகிறாராம். பல சமயங்களில் அவர்களை தோற்கடித்து பணத்தை கறந்து விடுகிறாராம். இதனால் தினமும் ஸ்பாட்டுக்கு வரும்போது எவ்வளவு பணம் பாக்கெட்டில் வைத்திருந்தாலும் அவற்றை சீட்டாட்டத்தில் தமன்னாவிடம் இழந்தே வீட்டிற்கு திரும்பியிருக்கிறார் ஆர்யா. இதனால் ஒரு கட்டத்தில் தமன்னா சீட்டு கட்டை கையில் எடுக்கிறார் என்றாலே, என் பாக்கெட்டுல சல்லி பைசாகூட கிடையாது, ஆளை விடு தாயி என்று கையெடுத்து கும்பிட்டபடி ஓட்டம் பிடிக்கத் தொடங்கினாராம் ஆர்யா.