தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த்ரிஷா தனது வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சமர், நான் சிவப்பு மனிதன் படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் கும்பகோணம் பகுதியில் நடக்க இருக்கிறது. தமன் இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜெய், த்ரிஷாவுடன் பிரபுதேவா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தில் வரும் ஜெய்யின் அண்ணன் கேரக்டர் பவர்புல்லான கேரக்டராம். அதில் பிரபுதேவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவருக்கு திரு கதை சொன்னதும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. பிரபுதேவா ஏற்கெனவே நடித்த களவாடிய பொழுதுகள் ரிலீசாகாத நிலையில் தற்போது இந்த புதுப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பிரபுதேவாவின் படங்கள் இந்தியில் தோல்வி அடைந்ததால் தமிழ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா.