தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் என சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதோடு தெலுங்கிலும் நடித்திருக்கும் இவர், தற்போது ரஜினி முருகன், இது என்ன மாயம், பாம்பு சட்டை என மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் தமிழில் மூன்று படங்களில் நடிப்பதால், தமிழ் சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ரஜினி முருகன் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். காரணம், அவருடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த படம் ஹிட்டடித்து முன்னணி நடிகையாகியிருப்பதால், அதேபோல், தான் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரஜினி முருகன் படமும் வெற்றி பெற்று தன்னை தமிழில் ராசியான நடிகையாக்கும் என்று நம்புகிறார்.
மேலும், கோலிவுட்டில் நீண்டகாலம் நிலைக்க வேண்டுமென்றால் மாடர்ன் கேரக்டர்களிலும் அதிகமாக நடிக்க வேண்டும் என்று மற்ற மலையாள நடிகைகளை மாதிரி வெட்டியான கண்டிசன்களை போட்டு டைரக்டர்களை டென்சன் செய்யாமல், நான் டைரக்டர்களின் நடிகை என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் எப்படி நடிக்க சொன்னாலும் தலையை தலையை ஆட்டுகிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் லட்சுமிமேனன், மியா ஜார்ஜ் போன்ற நடிகைகளெல்லாம் எட்டு கண்டிசன்களை முன்வைத்து படங்களை ஒத்துக்கொள்ளும் நிலையில், எந்த கண்டிசனும் போடாமல் நடிக்க சம்மதிக்கும் கீர்த்தி சுரேஷ், இப்போது சில கமர்சியல் டைரக்டர்களின் பேவரிட் நாயகியாகி வருகிறார்.