கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
தமிழ் சினிமா எண்ணற்ற திறமைமிக்க கலைஞர்களின் புகலிடமாய் இருந்துள்ளது. கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா, இயக்குனர் A வெங்கடேஷ் இயக்கும் 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ஸ்ருதி பாலா . 'மிர்ச்சி' செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் 'ரோபோ' சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
“ விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும்பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன. சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு பாவங்கள் கொண்டு வருவது சுலபமாய் அமைந்தது. இருப்பினும் எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் சார் இக்கதையை கூறினார். 'அங்காடி தெரு' படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா என்று ஆச்சரியத்தில் இருந்தேன். இப்படத்தில் முழுக்க முழுக்க உதவியாய் இருந்தார்.”