பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் கே.பாக்யராஜ். எந்தவொரு கதையாக இருந்தாலும் அதில் காட்சிகளும், வசனங்களும் அத்தனை தெளிவாக இருக்கும். அதனால் அவருக்கு பிறகு வந்த டைரக்டர்களெல்லாம் பாக்யராஜ்தான் எங்கள் ஸ்கிரிப்டுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
அதேபோல் நடிப்பிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார் பாக்யராஜ். ஆனால், நடனத்தில் மட்டும் அவர் ஆரம்பத்தில் இருந்தே வீக்தான். உடம்பை வளைத்து ஆடாமல், கை கால்களை நீட்டி உயர்த்தி உடற்பயிற்சி செய்வது போலவே ஆடுவார். அதை மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கிண்டலடிப்பார்கள். என்றபோதும் தனது பாணியை அவர் மாற்றிக்கொண்டதில்லை. எனக்கு அப்படிதான் நடனமாட தெரியும். எனக்கு தெரிந்ததை செய்கிறேன் என்று அதையே தொடர்ந்து வந்தார்.