கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமனுடன் அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் அதையடுத்து காதலில் விழுந்தேன், கந்த கோட்டை, வல்லினம் போன்ற படங்களில் நடித்தார். ஆனபோதும்,. எதிர்பார்த்தபடி எந்த படங்களும் ஓடவில்லை என்பதால், அவருடன் அறிமுகமான சித்தார்த் பெரிய ஹீரோவாகி விட்டபோதும், நகுல் இன்னமும் பின்தங்கியே இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது அமளி துமளி, நாரதன் படங்களைத் தொடர்ந்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நகுல். அதாவது, ஒரு இளம் விஞ்ஞானி போன்ற அந்த வேடத்தில் நடித்திருக்கும் நகுல், ஒரு காட்சியில் மூன்று மாடி பில்டிங்கிற்கு மேல் இருந்த ஒரு செல்போன் டவரில் ஏறி நின்று நடித்துள்ளார்.
அப்படி, 70 அடி உயரத்தில் ஏறி நின்று நடித்தபோது, சென்னை சிட்டியையே பார்த்து அசந்து போனதாக சொல்லும் நகுல், ஆரம்பத்தில் அத்தனை உயரத்தில் நின்று நடிக்க பயந்தபோதும், சென்னை நகரத்தின் அழகை அதன் மேல் நின்று பார்த்தபோது சந்தோசமாக இருந்தது என்கிறார். மேலும், இதற்கு முன்பு நான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறேன். அதைப்பார்த்து, இதுவரை பயங்கரமாக நடனமாடி வந்த நகுல், இந்த படததில் பயங்கரமாக நடித்திருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள. அதனால் என் உழைப்புக்கு இந்த படம் நல்ல பலனை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன் என்கிறார்.