Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

முக்கியத்துவம் இழந்து வரும் ஹீரோயின்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

10 பிப், 2015 - 12:46 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் பானுமதி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி, ஸ்ரீதேவி, சரிதா, ரேவதி என பல ஹீரோயின்கள் தங்கள் நடிப்பால் சினிமாவை தங்கள் கைபிடிக்குள் வைத்திருந்தார்கள். இன்றைக்கு, நடிக்கிற ஹீரோயின்களை விட கலர்புல் ஹீரோயின்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். நடிப்பு திறமைக்கு சவால்விடும் கேரக்டர்களை நடிகைகளும் விரும்புவதில்லை. அதற்கேற்ற மாதிரி படங்களும் வருவதில்லை. ஹீரோயின் ஓரியண்ட் சப்ஜெக்ட் மிகவும் அரிதாகவே இருக்கிறது.


ஹீரோயின்களின் வேலை என்ன?


சமீபத்தில் வெளிவந்த கயல் படம், ஹீரோயின் சப்ஜெக்ட்தான் ஆனாலும் அதில் ஒருவனை பார்த்த மாத்திரத்தில் காதல் கொண்டு இருக்கிற பாதுகாப்பையும் இழந்துவிட்டு ஊர்பேர் தெரியாதவனை தேடிப்போகிற ஹீரோயினாகத்தான் காட்டப்பட்டார். நயன்தாரா நடித்த கஹானி ரீமேக்கான நீ எங்கே அன்பே படம் ஹீரோயின் சப்ஜெக்ட். ஆனால் வித்யாபாலன் நடித்த மாதிரி கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்து சாதாரணமாக நடித்ததால் தமிழ், தெலுங்கு இரண்டிலும் படுதோல்வி அடைந்தது.


இன்றைய தமிழ் சினிமா ஹீரோயின்களின் வேலை என்ன? ஹீரோ கருப்போ சிவப்போ, நெட்டையோ குட்டையோ, நல்லவனோ கெட்டவனோ அவனை வலிந்து சென்று காதலித்தே தீர வேண்டும். அவனுடன் கற்பனையில் மிதக்க வேண்டும், டூயட் பாட வேண்டும், அவன் சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது... என ஹீரோக்களின் முதுகிற்கு பின்னால் நின்றுவிடுகிறார்கள்.


புதுமைப்பெண் ரேவதி எங்கே.?


கணவன் அயோக்கிய அரசியல்வாதி என்று தெரிந்தும் தன் கையால் அவனுக்கு மரணத்தை கொடுத்த அச்சமில்லை அச்சமில்லை சரிதாவோ, தளராத உறுதியில் வாழ்ந்து காட்டிய மனதில் உறுதி வேண்டும் சுஹாசினியோ, சந்தேகப்பட்ட கணவனை தூக்கி எறிந்த புதுமைப் பெண் ரேவதியோ இன்றைய தமிழ் சினிமாவில் இல்லை.


புதுமுக நடிகைகளின் மனநிலை!


நடிக்க வரும் புதுமுக நடிகைங்களுக்கோ இப்படி ஒரு கனமான கேரக்டரில் நடிக்க வேண்டும், திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. முதல் பேட்டியிலேயே அஜீத்துடன் நடிக்க வேண்டும், ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க என்ன செய்ய வேண்டும், எந்த ரூட்டை பிடிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.


தேசிய விருது ஆசை எத்தனை பேருக்கு இருக்கிறது


தேசிய விருது என்ற ஒன்று இருக்கிறது என்பதே பல நடிகைங்களுக்கு தெரியாது. அது யாருக்கு வேணும் என்பார்கள். விருது நடிகை என்ற பெயர் வாங்கிவிட்டால் கமர்ஷியல் படங்கள் கிடைக்காது அழுது வடிகிற கேரக்டர்கள்தான் கிடைக்கும் என்று நாகூசாமல் சொல்கிறார்கள். ப்ரியாமணிதான் கடைசியாக தேசிய விருது வாங்கிய நடிகை. அவரோ அடுத்த படத்திலேயே படு கிளாமராக நடித்து நான் விருது நடிகை இல்லை, கிளாமர் நடிகைதான் என்று சொல்லிக்கொண்டார். அதன் பிறகு அவர் பருத்தி வீரன் மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவமான ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இன்று அவரின் நிலை என்னாச்சு என்பதை மற்ற நடிகைகள் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்தி ஹீரோயின்களின் தைரியம்


இந்தியில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார், கர்ப்பிணியாக நடிக்கிறார், பிரியங்கா சோப்ரா மேரிகோமாக நடிக்கிறார். குயினாக நடிக்கிறார் கங்கனா ரணாவத், ஏன் அந்த தைரியும் தன்னம்பிக்கை இங்குள்ள நடிகைகளுக்கு இல்லை.


நடிகை என்பவர் ஒரு படத்தின் எண்டர்டெயினர். குறைவான ஆடை, நிறைய ஆட்டம், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர் இதுபோதும் என்று தங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் பார்வையை விசாலப்படுத்தினால், சம்பளத்தை இரண்டாம்பட்சமாக வைத்தால் அவர்களுக்கும் தேசிய விருது எட்டும் தூரம்தான். ஒரு ஹீரோ நினைத்தால் ஒரு வாய்ப்பு தந்துவிட முடியும், ஒரு தயாரிப்பாளர் நினைத்தால் ஒரு கோடி சம்பளம் தந்துவிட முடியும். ஆனால் தேசிய விருது உழைப்பால், நடிப்பால் மட்டுமே கிடைக்கும். அதை புரிந்து கொள்வார்களா இன்றைய ஹீரோயின்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in