'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழ்த்திரை உலகில் தற்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன தெரியுமா? ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் படத்தின் வெற்றிதான். அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான முதல் படம் இது!
சமீபகாலமாக பேய் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது. அரண்மனை, பிசாசு என சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற பல படங்களே இதற்கு உதாரணம்! இந்த வரிசையில் லேட்டஸ்ட் இணைப்பு டார்லிங் படம். பொங்கலையொட்டி வெளியான ஷங்கரின் ஐ மற்றும் விஷாலின் ஆம்பள படங்களுடன் டார்லிங் படமும் வெளியானது.
ஐ படத்தின் வெற்றியில் டார்லிங் படம் காணாமல் போய்விடப்போகிறது என்ற கணிப்புக்கு மாறாக மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆம்பள படம் பல தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டநிலையில், டார்லிங் படம் தற்போது 25-ஆவது நாளைக் கடந்திருக்கிறது! டார்லிங் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டுமல்ல இப்பட குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்! அடுத்த கட்டமாக டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றிய பேச்சுவார்த்தையும் ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.