‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பொதுவா பார்ட்டி என்றாலே அது கூத்தும், கும்மாளமும், குடியுமாகத்தான் போய்க் கொண்டிருக்கும், இதிலும் சினிமாக்காரங்க நடத்துற பார்ட்டி இருக்கே அதுக்கு அளவே இருக்காது, சமீபத்தில் இது மாதிரி ஒரு பார்ட்டியை நடத்தி போலீஸ் வரை கொண்டு சேர்த்திருக்கிறதாம் அந்த பிரச்சனை.
பார்ட்டி நடத்துறேன் என்ற பேர்வழியில் தனக்கு நெருக்கமான சில நண்பர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டுள்ளார் நடிகர் ராம் சரண். ஜூப்ளி ஹில்ஸ் சாலையிலுள்ள அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பார்ட்டி நள்ளிரவையும் தாண்டி விடியற்காலைவரை சென்றுள்ளது, பார்ட்டி நடந்தா கூட பிரச்சனையில்லையே பாட்டை போட்டு அதன் சத்தத்தை அதிகமாக வைத்து அக்கம் பக்கம் இருந்தவர்களையும் தூங்கவிடமால் செய்துவிட்டாராம் இவர். இந்த இரைச்சலால் டென்ஷனான அக்கம் பக்கத்தினர் ராம் சரணின் வீட்டின் முன் வந்து கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்களாம். சீனியர் ஐபிஎஸ் அதிகாரி கௌதம் சவாங் இதனை போலீஸ் தெரியப்படுத்த உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்து வந்துள்ளது, போலீஸ் அதிகாரிகள் வந்து ராம் சரணிடம் இந்த மாதிரி அக்கம் பக்கத்தினருக்கு தொந்தரவு தரும் வகையில் இனி பார்ட்டி நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்கள். இதற்கு ராம் சரணும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கலைந்து சென்றுள்ளனர். ஆனால் ராம் சரணின் பிஆர் கூறுகையில் இந்த மாதிரி சம்பவமே நடக்கவில்லை, சனி இரவு அவர் அவருடைய வீட்டில் தான் இருந்தார் என்று கூறுகிறார்.