Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாழ் வழக்கமான இலங்கை படமல்ல! -டைரக்டர் ஆனந்த்

10 பிப், 2015 - 10:30 IST
எழுத்தின் அளவு:

இலங்கை தமிழர்களை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வெளியானபோதும், அவை எதுவுமே மக்களை போய் ரீச் ஆகவில்லை. அதோடு போர் சூழலை மையப்படுத்தியே இருந்தன. அதனால், இலங்கை பிரச்சினைகளையோ, இலங்கை தமிழையோ இன்னும் யாருமே சரியாக சொல்லவில்லை எனறு ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் என்னிடம் சொன்னார்கள். முக்கியமாக, நாங்கள் அகதிகளாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவது போலவும், இல்லையேல் இங்கிருந்து அங்கு செல்வது போலவும்தான் படங்கள் வந்துள்ளன. ஆனால் எங்களைப்பற்றி மட்டும் முழுமையாக சொல்லக்கூடிய படம் இதுவரை வரவில்லை, அதனால் ஒரு குறை எங்களுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றனர். அப்போதுதான் நூறு சதவிகிதம் ஒரு இலங்கை தமிழர் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த யாழ் படத்திற்கான கதையை தயார் செய்தேன் என்கிறார் டைரக்டர் ஆனந்த்.


இந்த யாழ் படம் குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்றைக்கு வெளிநாடுகளில் தமிழ் படங்கள்தான் அதிகமாக ஓடுகின்றனர். காரணம், ஆஸ்திரேலியா, கனடா என பல நாடுகளில் இலங்கை தமிழர்கள் அதிகமாக உள்ளனர். தமிழ் சினிமாவை வெளிநாடுகளில் அதிகமாக பார்ப்பது இலங்கை தமிழர்கள்தான். இப்போது வெளியாகும் பல தமிழ் படங்களின் வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அதனால் அந்த தமிழர்களின் திருப்தியை மனதில் கொண்டு இந்த படம் தயாராகியுள்ளது.


மேலும், இந்த படத்தின் கதை இலங்கையில ஆரம்பித்து முடிகிறது வரைக்கும் அந்த ஊரிலேயே நடக்கிறது. தமிழ்நாட்டு கேரக்டர்களே கிடையாது. இந்த பட்த்தை ரொமான்டிக் திரில்லராகத்தான் எடுத்திருக்கிறேன். இது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற ஆடியன்சுக்கு 2 மணி நேரமும் இலங்கைக்கு போயிட்டு வந்த மாதிரியே இருக்கும். இலங்கையை மையப்படுத்தி எவ்வளவோ படம் வந்தாலும் இது ஒரு மாறுபட்ட வித்தியாசமான படமாக இருககும்.


இலங்கை என்றாலே போர்க்களத்தை மையமாக வைத்துதான் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள்ளும் காதல் உள்ளது. அன்பு, பாசம் எல்லாம் உள்ளது. அதனால் அங்குள்ள அரசியலை எடுக்காமல், அதாவது போர்சசூழலில் அந்த மக்களுக்கிடையே உள்ள காதல், அன்பு, பாசம், பயம், பயணம் போன்ற விசயஙகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் இந்த யாழ். மேலும் காதல் கதையை மட்டுமே சொல்லாமல் அங்கே இருக்கிற மக்களுக்கு ஒரு விழிப்புணர்வும். இஙகே இருக்கிற மக்களுககு அங்குள்ள மக்களைப்ப்ற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்படுகிற மாதிரியான கதை.


காதல் கதை என்றாலும் இன்னும் சில ட்ராக்கும் கதையில் உண்டு. இந்த படம் மூலம் இலங்கை தமிழர்களைப்பற்றி தமிழ்நாட்டு மக்களுககு நிறைய விசயங்கள் தெரியவரும். அதோடு, ஒரு முழு படத்திலும் இலங்கை தமிழிலேயே பேசி யாரும் பார்த்ததுமில்லை. ஆனர்ல இந்த படத்தில் படம் முழுக்க இலங்கையையும், இலங்கை தமிழையும் மட்டுமே பார்ப்பார்கள், கேட்பார்கள். அதனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் குறையினை போக்கும் படமாக இந்த யாழ் இருப்பதோடு, தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களைப்பற்றிய வாழ்க்கைச்சூழல் பதிவாகும்.


மேலும், இந்த படத்திற்கான லொகேசன் அனைத்தும் தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு, மரக்காணம் போன்ற பகுதியில் உள்ள சில கிராமங்களிலேயே படமாக்கியிருக்கிறேன். அதேசமயம், படத்தில் பணியாற்றியவர்கள் பலர் இலங்கை தமிழர்கள். அதோடு, டப்பிங்கையும் சில இலங்கை தமிழர்கள் பேசியுள்ளனர். அங்குள்ள டப்பிங் ஆர்ட்டிஸ்களுக்கு இலங்கை தமிழர்களை வைத்தே பேச பயிற்சி கொடுத்து டப்பிங் பேச வைததிருக்கிறேன். அந்த வகையில, இலங்கையிலுள்ள ஒரு கிராமத்துக்கு போய் ஒரு இரண்டு மணி நேரம் இருந்து விட்டு வந்த பீல் ரசிகர்களுக்கு இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


அது மட்டுமின்றி, இந்த படம் ஒரு டிராமாவாக இருக்காது. திரில்லர் கதை என்பதால் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். குறிப்பாக, இலங்கை மக்களுக்கு அவர்கள் சந்தித்த வலியினை சொல்வது அவர்களுக்கே பிடிக்கவில்லை. அந்த வலியை மறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதோடு, எங்கள் வாழ்க்கை இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதனால் அதைப்பற்றி படமெடுங்கள் என்று அவர்கள் சொன்னதை மனதில் கொணடு இந்த யாழ் படத்தை இயக்கியிருக்கிறேன். அதனால் இந்த படம் கண்டிப்பாக வழக்கமாக வெளிவரும் இலங்கை தமிழர்களின் வலியினை சொல்லும் படமாக இல்லாமல், காதல், திரில்லர் கலந்த புதுமையான படம். அதனால் இது இலங்கை தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் நூறு சதவிகிதம் புதுமையான படமாக இருக்கும் என்கிறார் டைரக்டர் ஆனந்த்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in