ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமிதாப் பச்சன் என்ற உலகமே போற்றும் இந்தி(ய) சூப்பர் ஸ்டார் நடித்திருந்தாலும் வட இந்திய ஊடகங்கள் 'ஷமிதாப்' படத்தை பாராட்டித் தள்ளுவதை மிகவும் கவனமாக தவிர்த்து வருகின்றன. இந்த விஷயம்தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. படத்தை தமிழ்நாட்டில் மொழி புரியாமல் பார்த்த ரசிகர்களே படத்தில் உள்ள நட்சத்திரங்களின் நடிப்பையும், இளையராஜாவின் இசையையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவையும் உணர்வுபூர்வமாக பாராட்டி வருகிறார்கள். ஏன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்ற நடிகர்கள் கூட படத்தைத் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், பல முன்னணி நாளிதழ்கள், இணையதளங்கள் உட்பட 'ஷமிதாப்' படத்திற்கு வெறும் இரண்டு ஸ்டார், இரண்டரை ஸ்டார் என்றும் வசூல் விவரங்களை மிக மிகக் குறைத்தும் வெளியிட்டு வருகின்றன. சில நாளிதழ்களில் இளையராஜாவின் இசையைப் பற்றியோ, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பற்றியோ, ஏன் அவர்களது பெயரைக் கூடக் குறிப்பிடாமலே இருக்கிறார்கள். பால்கியும், அமிதாப்பும், இளையராஜாவும் இதற்கு முன் இணைந்த 'சீனிகம், பா' ஆகிய படங்களை இதே வட இந்திய ஊடகங்கள் பாராட்டித் தள்ளின. இப்போது மட்டும் ஏன் அவர்கள் பாராட்டவில்லை என்பதற்கும் காரணம் இருக்கிறது என தமிழ் நாட்டுக் கலைஞர்களின் திறமை மீது மரியாதை வைத்துள்ள பலர் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
தனுஷ், தான் அறிமுகமான 'ராஞ்சனா' ஹிந்திப் படத்தின் மூலமே 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார். ஹிந்தித் திரையுலகில் இப்படி ஒருவர் நுழைந்து வெற்றி பெற்றது அப்போதே அங்குள்ள பலருக்குப் பிடிக்கவில்லை. இப்போது மீண்டும் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தனுஷ், அமிதாப்புக்குப் போட்டியாக நடித்திருக்கிறார் என்று பேசப்படுவதை ஹிந்தித் திரையுலகத்தினராலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். அதோடு கமல்ஹாசனின் மகளான அக்ஷராவையும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகத்தான் பார்க்கிறார்களாம். பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தனுஷ், அக்ஷரா இப்படி ஒட்டுமொத்தமாக தமிழர்களே முக்கிய பங்கு வகித்துள்ளதால்தான் 'ஷமிதாப்' படத்தை சிறந்த படமாகப் பார்க்காமலும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற வைக்க விடாமலும் வட இந்திய ஊடகங்கள் தடுத்து வருவதாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கின்றனர்.