பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கலை' மிகப்பெரிய பொக்கிஷம். இதைத் தான் அன்றே வகுத்து வைத்தனர், ஆயக் கலைகள் 64 என்று. கலையின் ராஜாங்கம், திரைத்துறையில் இன்று பின்னியெடுக்கிறது. நினைத்த மாத்திரத்தில் தாஜ்மஹால் செட்டை தத்ரூபமாக வடிவமைக்க வேண்டும் என்றால், கலையில் கரை கண்டிருக்க வேண்டும். தமிழ் திரையுலகில், தோட்டா தரணி, சாபூசிரில், ராஜீவன் போன்றோர் முக்கியமான இடங்களை பிடித்துள்ளனர். இவர்களின் வரிசையில் இடம் பிடிக்க அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார், வீரசமர்.
மதுரை உசிலம்பட்டி ஐயனார்குளம் கல்கொண்டம்பட்டி பகுதியை சேர்ந்த இவர், சாபு சிரிலிடம், ஐந்து வருடங்கள் பயிற்சி எடுத்தவர். மணிரத்னம், சங்கர் போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். ஹேராம், கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், தமிழன், சிட்டிசன் ஆகிய படங்களில், கலை நுணுக்கங்களை கற்றுக் கொணடவர். தனியாக, இவர் முதன் முதலில் கலை இயக்குநராக பணிபுரிந்த படம் காதல். வெயில், பூ, டிஷ்யூம், வாழ்த்துக்கள், பாண்டி ஆகிய படங்களில் கவனம் ஈர்த்தவர். தற்போது, கார்த்திக் நடிக்கும் 'கொம்பன்' படத்தில் கலை இயக்குநராக உள்ளார். வீரசேகரன் என்ற படத்தில், அமலா பாலுக்கு ஜோடியாகவும், பூ திரைப்படத்தில் நாயகியின் அண்ணனாகவும் தலை காட்டியவர். கோவை வந்த இவரை சந்தித்த போது...
* கலை இயக்குநர் பணி, சினிமாவில் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது?
இயக்குநரின் சிந்தனையை, கண் முன்னால் நிறுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது கலை இயக்கம். கலை இயக்குநர் இல்லாமல், சினிமா என்பது சாத்தியமில்லாத ஒன்று. கடலைக் கூட, நிஜம் போல வடிவமைத்து விடலாம். ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், படிக்கத் தெரியாதவர்களையும், ரசிக்கும்படி செய்வது தான் கலை இயக்குநரின் முக்கிய பணி.
* நீங்கள் பணிபுரிந்த படங்களில், எது வித்தியாசமாக பேசப்பட்டது?
காதல் படத்தில் வரும் 'ஒர்க் ஷாப்'ல், டயருக்குள் வாட்ச் வடிவமைக்கப்பட்டது, பாராட்டு பெற்றது. இதன் 100வது நாள் விழாவில், படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் என்னை அழைத்து பாராட்டி, 25 ஆயிரம் ரொக்கம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டிஷ்யூம் படத்தில், 'நெஞ்சாங்கூட்டில்' பாடலில், பச்சை நிற கார், 'பூ' திரைப்படத்தில், ராஜாபாளையத்தில் எடுக்கப்பட்ட 'மாமா எங்கிருக்க ஆகாட்டு' பாடலில், மரத்தின் வேரை கொண்டு குதிரையும், குதிரை குட்டியை போன்று உருவாக்கப்பட்டது, பாராட்டை குவித்தது. வெயில் திரைப்படத்தில் வரும் தியேட்டர், பெயரை பெற்றுத் தந்தது.
* உங்கள் துறையில் தனித்துவமாக நிற்க, என்ன மாதிரியான ஐடியாக்களை பின்பற்றுகிறீர்கள்?
கலை இயக்கத்தில் பிரம்மாண்டத்தை காண்பிக்க வேண்டும்; அதே நேரத்தில், தயாரிப்பாளர்களின் செலவையும் குறைக்க வேண்டும். மற்றவர்கள் மத்தியில் வித்தியாசப்படுத்தும் கண்ணோட்டம் இருக்க வேண்டும். நமக்குள் புதிய சிந்தனை பிறக்க வேண்டும். இதற்காக, இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கை மூலம், புதிய, புதிய விஷயங்களை கலை இயக்கத்தில் கொண்டு வரலாம்.
* நடிகர், நடிகைகளை மட்டுமே ரசிக்காமல், கலை இயக்கத்தையும், ரசிகர்கள் கவனிக்குறார்களா?
பழங்காலத்தில் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என்று, நடிப்பையும், ஸ்டைலையும் பேசி வந்தனர். இதற்கு அடுத்தபடியாக, ஒளிப்பதிவு அருமை என்ற பேச்சு இருக்கிறது. தற்போது, யார் அந்த கலை இயக்குனர்? என்ற அளவுக்கு, ரசிகர்கள், திரைப்படத்தின் அனைத்து விஷயங்களையும் உற்றுநோக்குகிறார்கள்.